Thursday, April 14, 2011
அதிரையில் அமைதியான முறையில் வாக்குபதிவு
Wednesday, April 13, 2011
சட்ட மன்ற தேர்தல் வாக்குபதிவு தொடங்கியது. நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.
Thursday, April 7, 2011
அதிரையில் கலை கட்டுகிறது தேர்தல்........
Sunday, April 3, 2011
அதிரை மக்களின் நீண்ட கால கனவுகள் நிறைவேறுமா?.......
இந்த கனவுகள் நிறை வேற உங்கள் வாக்குகளை தான் பேரமாக வைக்க வேண்டும்.
ரூ.100 க்கும் 200 க்கும் ஆசைப்பட்டு உங்கள் ஓட்டுகளை விற்காதீர்கள். அரசியல் கட்சிகள் உங்கள் ஓட்டுகளை வைத்து அவர்கள் சட்டசபையிலும் பாராளுமன்றத்திலும் குளிர் காய்கிறார்கள். ஒட்டு போட்ட நமக்கு ஒன்றும் செய்ய மாட்டார்கள். நீங்கள் போய் கேட்டால்.அதான் பணம் தந்தோமே என்பார்கள். விலை மதிப்பில்லாத உங்கள் ஓட்டுக்களை அற்ப காசுக்காக விலைபோக போகிறீர்களா?. ஒட்டு உங்கள் உரிமை அதை நீங்கள் உங்கள் எதிர்காலத்திற்கு பயன்படும் கருவியாக மாற்ற இந்த தேர்தலை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
அதிரை மக்களின் நீண்ட கால கனவுகள்:
- தெருக்கோடியில் இருந்த ஊர்களெல்லாம் நகராட்சியை இருக்கும் போது நகராட்சிக்குரிய அணைத்து தகுதிகள் இருக்கும் அதிரை மூன்றாம் நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
- அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியை மேல்நிலை பள்ளியாக தரம் உறைதல் வேண்டும்.
- அதிரையில் ஆபத்து நேரத்தில் உதவ உருபடியாக ஒரு மருத்துவமனையும் இல்லை.அதிரையின் பழமை வாய்ந்த அரசு மருத்துவமனையை முழுநேரமும் செயல்படும் அரசு மருத்துவமனையாக தரம் உயர்தல் வேண்டும்.
- அதிரையில் பெருகிவரும் வாகன விபத்துகளால் பதிக்க படுவோரை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல நமதூருக்கு தனி 108 ஆம்புலன்ஸ் செயல் படுத்துதல் வேண்டும்.
- அதிரையில் தீவிபத்து ஏற்பட்டால் அணைக்க உதவும் தீயணைப்பு வண்டியுடன் கூடிய தீயணைப்பு நிலையம் அமைதல் வேண்டும்.
- அதிரை-கும்பகோணம் மார்க்கத்தில் இது வரை பேருந்து வசதி கிடையாது. இதனால் அதிரை மற்றும் மதுக்கூர் மக்களின் போக்குவரத்து தூரம் தேவையில்லாமல் அதிகமாகிறது. இந்த வழித்தடத்தில் பேருந்து போக்குவரத்து ஏற்படுத்த வேண்டும்.
- அதிரை நகரில் பேருந்து நிலைய இல்லாமல் இருக்கிறது. இதனால் பயணிகள் கஷ்டபடுகிறார்கள். அவர்களின் நலனுக்காக பேருந்து நிலையம் அமைக்க பட வேண்டும்.
- கடந்த இரண்டு வருடமாக நமதூரில் செயல்பட்ட வருவாய் அலுவலர் தற்போது இல்லை.இதனால் பொது மக்கள் வருமான சான்றிதழ் போன்ற பல்வேறு காரணங்களுக்காக பட்டுகோட்டை செல்ல வேண்டிய நிலையுள்ளது. உடனே நமதூருக்கு வருவாய் அலுவலர் தேவை.
Wednesday, March 30, 2011
அதிரையில் தேர்தல் பிரச்சாரம்..!..!..!..!..
Wednesday, May 20, 2009
திமுக வெற்றி அதிரையில் அட்டகாசம்
தேர்தல் வெற்றி தொடர்பாக பட்டாசு வெடித்ததால் ஏற்பட்ட தகராறில் அ.தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தி.மு.க.வினரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்.பட்டாசு வெடித்ததில் தகராறுஅதிரை பழஞ்செட்டித்தெருவை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன்கள் ராமராஜ் என்ற கனகராஜ் (வயது46), ஜெயசுந்தர் (43), சிவக்குமார் (வயது40). ராமராஜின் மகன் கமல்ராஜ் (வயது25). சிவக்குமார் அதிரை நகர எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணி செயலாளராக உள்ளார். மற்றவர்கள் அ.தி.மு.க.வில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் அதிரையில் மளிகை கடை நடத்தி வருகிறார்கள்.தஞ்சை தொகுதியில் தி.மு.க. வெற்றி பெற்றதை தொடர்ந்து அதிரையில் நேற்று முன்தினம் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது சிவக்குமாரின் கடை அருகேயும் வெடி வெடித்தனர். இதனை சிவக்குமார் மற்றும் அவரது சகோதரர்கள் தட்டிக்கேட்டனர். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
வெட்டிக்கொலை
இந்த நிலையில் நேற்று காலை ராமராஜ், ஜெயசுந்தர், சிவக்குமார், கமல்ராஜ் ஆகிய 4 பேரும் கடையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த 10-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர், கடையில் இருந்த 4 பேரையும் உருட்டுக்கட்டை, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் சரிமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டனர். படுகாயம் அடைந்த 4 பேரையும் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் ஜெயசுந்தரை மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடைகள் அடைப்பு
ஜெயசுந்தர் இறந்த தகவலை அறிந்ததும் அதிரையில் கடைகள் அடைக்கப்பட்டன. அந்த பகுதியில் பஸ்கள் ஓடவில்லை. இது குறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை நகர துணை போலீஸ் சூப்பிரண்டு அழகேசன் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.இது குறித்து அதிராம்பட்டினம் போலீசார் தி.மு.க.வை சேர்ந்த இராம குணசேகரன், சோமு, மாரிமுத்து, பாலாஜி மற்றும் பலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் மீது கடந்த சில நாட்களுக்குமுன் மத்திய சென்னை தேர்தல் வண்முறையை கண்டித்து அதிரை மமகவினர் சுவரொட்டி ஒட்டியதை கிழித்தது தொடர்பாக அதிரைகாவல் நிலையத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நன்றி :அதிரை xpress,அதிரை புதியவன்
அதிரையில் உடனடி போட்டோ

