Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Monday, January 27, 2014

மீலாத் விழா - ஒரு பார்வை

மீலாத் விழாவினுடைய அடிப்படை நோக்கம், நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவதும், அவர்களுடைய சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதும், மக்களை ஈமானின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் உணர்வூட்டுவதும், அவர்களின் நற்குணங்களை அறிந்து கொள்ளுவதும், சந்தோசத்தையும் முஹப்பைத்தையும் மற்றும் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதும், அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை சொல்லி காட்டுவதும், மக்களுக்கு உணவளித்தல் போன்ற நல்ல அமல்களை செய்வதும் அதன் மூலம் நன்றியை வெளிப்படுத்துவதும் ஆகும், என்று இந்த பிறந்த நாள் விழா எடுக்கும் மக்கள் கூறுகின்றனர். 

இதனை மேலோட்டமாக பார்த்தால் சிறப்பான காரியமாக தெரியும். ஆனால் உண்மை அவ்வாறல்லா . மார்க்கத்தில் பொதுவாக எல்லா காலங்களிலும் செய்வதற்கு சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு குறிப்பிட்ட நாளை மையமாக கொண்டு செய்வதற்கு ஆகுமாக்கி கொண்டுள்ளார்கள் என்பது உன்னிப்பாக கவனித்தால் தெரியும். 

சரி, இவர்கள் கண்ணோட்டதிலேயே இந்த விடயத்தை அணுகி பார்த்தால் அதிலும் உண்மை இல்லை. அதாவது , நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறந்த நாள் கொண்டாட்டங்களை மார்க்கத்தில் சிறப்பித்துக் கூறப்பட்ட அமலாக மாற்றுவதற்கு ஒரு சதி முயற்சியே அன்றி வேறில்லை. அதற்காக , ரபியுல் அவ்வல் 12 ம் நாளை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினமாக அறிவித்து கொண்டாடுகின்றார்கள். 

இந்த பிறந்த தினம் பற்றிய குறிப்பு ஆதாரப்பூர்வமான ஹதீசுகளில் இல்லை. ஆனால் அவர்கள் மரணித்த திகதி ரபியுல் அவ்வல் 12 ம் நாள் என்று ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் உள்ளன. இதனை இமாம் அத் தபரி, இமாம் இப்னு கஸீர் ரஹீமஹுல்லாஹ் அன்ஹும் அஜ்மயீன் பதிய வைத்துள்ளார்கள். இவர்கள் கொண்டாடும் இந்த பிறந்த தின திகதியை சற்று அலசி பார்த்தால் உண்மை புரிந்துவிடும். 

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறக்கும் பொது, அவர்கள் நபி என்பதை யாரும் அறிந்ததில்லை. இன்னும், ஹிஜ்ரி கலண்டர் கணக்கெடுப்பும் இருக்கவில்லை. ஹிஜ்ரி கணக்கெடுப்பு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹிஜ்ரத்துக்கு பின் தான் துவங்குகிறது. அப்படியாயின் , இந்த பிறந்த நாள் , ரபியுல் அவ்வல் 12 ம் நாள் என்று எப்படி கணிப்பது ? ஹிஜ்ரத்துக்கு பின் தான் பிறந்தார்கள் என்று சொல்லப் போகிறார்களா ? இந்த பச்சை பொய்யை யாரும் 
ஏற்க மாட்டார்கள்.

எனவே, இந்த பிறந்த நாள் ரபியுல் அவ்வல் 12 ம் நாள் அடிப்படையே பொய்யாகும். இன்னும் இந்த பொய், நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்தை கொண்டாடுவதற்கு செய்யப்பட்ட ஒரு சதி என்பதை வரலாற்றை நல்ல முறையில் பார்த்தவர்கள் அறிந்துக் கொள்ளலாம். 

அதாவது, இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை முதலில் அறிமுக படுத்தியவர்கள் 4 வது நூற்றாண்டில் தோன்றிய  "பாத்திமத்" என்ற யூத வழிதோன்ரலில் வந்த ஒரு வழிகெட்ட பிரிவினர் ஆவார்கள். 

இவர்கள் அப்துல்லாஹ் பின் மைமூன் அல்கதாஹ் என்கின்ற யூதனின் சந்ததியினரே . இந்த வழிகெட்ட பிரிவினர் எகிப்தில் ஆட்சி நிருவியபொழுது தான் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறந்த நாளை, பிறந்த நாளாக திரித்துக் கூறி கொண்டாட்டங்களை ஆரம்பித்தனர். 

ஏனெனில், இவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு தான் நபித்துவத்துக்கு தகுதியானவர்கள் என்று வாதிட்டவர்கள். இவர்கள் தான் அல் அஸ்கர் என்ற பல்கலை கலகத்தையும் நிறுவினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்தில் சந்தோஷப் படும் இந்த யூத பரம்பரையின் சதியை அதே பரம்பரையில் வந்த ஷியாக்களும் இவர்களுடன் நெருங்கிய சகவாசம் செய்யும் சூபியாக்களும் கொண்டாட தொடங்கினர். இன்னும், இது 1910 ம் ஆண்டு தான் முதன் முதலில் உத்தியோகபூர்வ தேசிய விழாவாக துருக்கியினால் கொண்டாடப்பட்டது. 

இவ்வாறு, இந்த பொய்யின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொண்டாட்டத்தை மார்க்கமாக்க பலரும் அறிந்தும் அறியாமலும் முற்பட்டனர். இதில் இமாம் ஷுயுத்தி போன்றவர்களும் தப்பவில்லை. 

அந்த வகையில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசிப்பு பற்றி பொதுவாக மார்க்கம் வழியுறுத்தும் விடயங்களை இந்த குறிப்பிட்ட நாளை கொண்டாட ஆதாரமாக சுட்டிக் காட்டுகின்றனர். 

ஆனால், இந்த உம்மதுல் இஸ்லாமியாவில் , எங்கள் அனைவரையும் விட நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அதிகம் நேசித்த, அல்லாஹ்வினால் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தோழர்களாக தேர்ந்து எடுக்கப்பட்ட , நபியின் நேசிப்பில் முன்னுதாரணமாக திகழ்ந்த அந்த அருமை சஹாபாக்கள் யாரும் இந்த ரபியுல் அவ்வல் 12 ம் நாளை நபியை நேசிக்கும் பிறந்த நாளாக கொண்டாடவில்லை. அவர்களுக்கு பின் வந்த தாபியீன்கள் கொண்டாடவில்லை. அவர்களை தொடர்ந்த சலபுஸ் சாளிஹீன்கள் கொண்டாடவில்லை. 

ஏன் எமது சிறப்புக்குறிய அந்த நான்கு இமாம்களும், செய்யவுமில்லை, பதியவும் இல்லை . இன்னும், குத்புத் சித்தா வின் இமாம்கள் என்று போற்றப்படக் கூடிய அந்த ஆறு கிரந்தங்களின் இமாம்களான புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னு மாஜா , அபூ தாவுத் , நஸாயி ரஹீமஹுல்லாஹ் அஜ்மயீன், யாரிடமிருந்தும் நேரடியாக ஒரு அறிவிப்பும் கொண்டு வரவும் முடியாது, அவர்கள் செய்ததுமில்லை , பதியவும் இல்லை. 

இவர்கள் அனைவரும் இஸ்லாமிய மார்க்கத்தின் வரலாறை தந்தவர்கள். 
நபியின் நேசிப்பில் எங்கள் அனைவரையும் விட சிறப்பானவர்கள் . 

ஆனால், எமது சமூகம் இஸ்லாமிய வரலாறை இமாம்களிடம் இருந்து பெறாமல் மார்டின் லிங்க் போன்ற குப்பார்களின் , இஸ்லாமிய எதிரிகளின் கிதாபுகளில் இருந்து பெற்றால் இது தான் நிலைமை. 

கிறிஸ்த்தவ சமுதாய மக்கள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 25ம் நாள் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள். இவர்கள் ரபியுல் அவ்வல் 12 ஐ கொண்டாடுகிறார்கள்.  பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது கிருஸ்தவர்களின் மத அனுஷ்டானத்தை முன்மாதிரியாகக் கொண்டு எமது சமுதாயத்துக்குள் புதிதாகப் புகுத்தப்பட்ட வழிகேடுதான் என்பதை அறிந்து கொள்ளலாம் .

எனவே, வருடத்தில் ஒரு நாளை , நபியை நேசிக்கும் ஒரு நாளாக கிருஸ்தவர்களின் மத அனுஷ்டானத்தை முன்மாதிரியாகக் கொண்டு எடுத்துக் கொள்வது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பித் அத் என்பது சந்தேகமே இல்லை. 

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது பிறந்த நாளை பற்றி குறிப்பிடும் பொது பின்வருமாறு கூறுகிறார்கள் . 

" நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரதி திங்கள் தோறும் நோன்பு நோற்கும் வழக்குமுடையோராக இருந்தார்கள். அது பற்றி நபித்தோழர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவிய போது: "அந்நாளில் நான் பிறந்தேன். அதில்தான் என் மீது (அல்குர்ஆன்) இறக்கப்பட்டது" எனப் பதில் கூறினார்கள். (முஸ்லிம்).

இவ்வாறு தன்னுடைய பிறந்த நாளை நோன்பு நோற்பதில் கழித்த நபியின் முன்மாதிரி இருக்க , அந்த உத்தம நபியின் பிறந்த நாளை கொண்டாட , மௌலிது ஓத, பிறந்த நாளை சிறப்பிக்க பொது மார்க்க நிகழ்ச்சிகள் நடத்த, ஊர்வலம் செல்ல எங்கே ஆதாரம் இருக்கிறது ? 

நபியின் பிறந்த நாளில் அந்த நபியின் முன் மாதிரியை எடுக்காத இந்த சமூகங்கள், நிச்சயமாக பிறந்த நாளை அல்ல கொண்டாடுகிறார்கள் , நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறந்த நாளை தான் கொண்டாடுகிறார்கள் என்பது பட்டவர்த்தனமான உண்மையாகும். ஏனெனில், பித் அத்களை சுன்னாவாக பின்பற்றும் இந்த மக்கள், இறந்த நாளை, பிறந்த நாளாக கொண்டாடுவதில் புதுமை இல்லை. 

இந்த வரலாற்றின் அடிச்சுவட்டில் வந்த ஷீயாக்கள் தான், இன்றும் வீதி வீதியாக பட்டாசு கொழுத்தி , பாண்ட் வாத்தியம் இசைத்து ஊர்வலம் செல்வதை இலங்கையிலும் காணலாம். 

இதில் சற்று மாறுபட்டு, பச்சை கொடிகளை கையில் ஏந்தி, வீதி வீதியாக குளிர்பானங்களும் இனிப்புக்களும் பரிமாறப் பட்டு ஊர்வலம் கொண்டு செல்பவர்கள் தான் பச்சை தலைப்பாகை ஷீயா இஸ்மாயிலியா பிரிவினர் ஆவார்கள். இந்த மக்களோடு கை கோர்பவர்கள் தான் சூபியாக்கள் மற்றும் தரிக்காவாதிகள். இனம் இனத்தோடு தான் சேரும் என்பது போல வழிகேடர்கள் வழிகேடர்களுடன் இணைந்துக் கொண்டனர்.

இந்த பித் அத் ஐ  எகிப்தில் தேசிய கொண்ட்டாட நாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் இஹ்வானுல் முஸ்லிமீன் ஹசனுள் பன்னாஹ். அவர் தான் தேர்தலில் இருந்து வாபஸ் வாங்க வைத்த இரண்டு கோரிக்கைகளில் ஒன்று தான் இந்த மீலாத் விழாவை உத்தியோக பூர்வமாக தேசிய கொண்டாட்டம் ஆக்க கோரிக்கை வைத்தது.  இந்த செய்தி அல்இஹ்வானுல் முஸ்லிமூன் அஹ்தாதுன் ஸனஅத் அத்தாரீஹ்’  (இஹ்வானுல் முஸ்லிமீன், வரலாறு படைத்த சில நிகழ்வுகள்) என்ற நூலின் முதலாம் பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது !!. 

இவர் இந்த பாத்திமத் பிரிவால் உருவாக்கப்பட்ட அல் அஸ்கர் பல்கலைக் கழகத்தில் பயின்றவர் என்பது இங்கு குறிப்படத்தக்கது. இதே அநியாயம் இலங்கை நாட்டிலும் செய்யப்பட்டுள்ளது.

இஸ்லாமிய மார்க்கம் அல்குர் ஆன் அஸ்ஸுன்னா எ‌ன்ற இரண்டு அடிப்படைகளில் அமைந்துள்ள ஒரு கண்ணியமான மார்க்கமாகும். அந்த அல்குர் ஆணையும் அல்ஹதீஸையும் சரிவரப் புரிந்துக் கொள்ள அதற்கென ‌சில அடிப்படைகள் இருக்கின்றன. 

ஹதீஸ்களை விளங்கவும் அது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அம்சங்களையும் அணுவணுவாக அலசிடவும் உலமாக்கள் பல அடிப்படைகளை எமக்கு கற்றுத்தந்துள்ளார்கள். அவைகளை நாம் சரிவரப் புரிந்துகொண்டதன் பின்னர் ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன, அது தரும் போதனைகள் என்ன என்பன போன்ற பல விடயங்களை சரியாகவும் நேராகவும் புரிந்துக் கொள்ள முடியும். 

மார்க்கத்தை முறையாக படிக்க வேண்டும். முறையாக படித்தவர்களிடம் இருந்து , இல்மை சுமந்தவர்கள் என்று சிபாரிசு செய்யப்பட்டவர்களிடம் இருந்து மார்க்கத்தை பெற வேண்டும். இல்லையெனில் வழிகேட்டை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளும் கதை தான் நமது கதையாகிவிடும். 

எனவே நாம் இந்த  விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவதோடு அதனை சரிவர நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளை வெகுமதிகளாக பெற்றுக் கொள்ள முயல்வோமாக.  

எனவே அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! அல்குர் ஆணையும் அஸ்ஸுனாவையும் சஹாபாக்களின் விளக்கத்தில் எடுத்துவைக்கும் கருத்துக்களை ந‌ல்ல முறையில் அலசி நேரான பாதையில் செ‌ன்று வெற்றி பெற்றவர்களாக வாழ எம்மனைவருக்கும் அல்லாஹ்  தெளபீக் செய்தருள்வானாக ! 


அல்லாஹ் தான் அறிந்தவன். 

Sunday, May 12, 2013

மீலாத் விழா ஒரு பார்வை ...


மீலாத் விழாவினுடைய அடிப்படை நோக்கம், நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவதும், அவர்களுடைய சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதும், மக்களை ஈமானின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் உணர்வூட்டுவதும், அவர்களின் நற்குணங்களை அறிந்து கொள்ளுவதும், சந்தோசத்தையும் முஹப்பைத்தையும் மற்றும் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதும், அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை சொல்லி காட்டுவதும், மக்களுக்கு உணவளித்தல் போன்ற நல்ல அமல்களை செய்வதும் அதன் மூலம் நன்றியை வெளிப்படுத்துவதும் ஆகும், என்று இந்த பிறந்த நாள் விழா எடுக்கும் மக்கள் கூறுகின்றனர். 

இதனை மேலோட்டமாக பார்த்தால் சிறப்பான காரியமாக தெரியும். ஆனால் உண்மை அவ்வாறல்லா . மார்க்கத்தில் பொதுவாக எல்லா காலங்களிலும் செய்வதற்கு சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு குறிப்பிட்ட நாளை மையமாக கொண்டு செய்வதற்கு ஆகுமாக்கி கொண்டுள்ளார்கள் என்பது உன்னிப்பாக கவனித்தால் தெரியும். 

சரி, இவர்கள் கண்ணோட்டதிலேயே இந்த விடயத்தை அணுகி பார்த்தால் அதிலும் உண்மை இல்லை. அதாவது , நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறந்த நாள் கொண்டாட்டங்களை மார்க்கத்தில் சிறப்பித்துக் கூறப்பட்ட அமலாக மாற்றுவதற்கு ஒரு சதி முயற்சியே அன்றி வேறில்லை. அதற்காக , ரபியுல் அவ்வல் 12 ம் நாளை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினமாக அறிவித்து கொண்டாடுகின்றார்கள். 

இந்த பிறந்த தினம் பற்றிய குறிப்பு ஆதாரப்பூர்வமான ஹதீசுகளில் இல்லை. ஆனால் அவர்கள் மரணித்த திகதி ரபியுல் அவ்வல் 12 ம் நாள் என்று ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் உள்ளன. இதனை இமாம் அத் தபரி, இமாம் இப்னு கஸீர் ரஹீமஹுல்லாஹ் அன்ஹும் அஜ்மயீன் பதிய வைத்துள்ளார்கள். இவர்கள் கொண்டாடும் இந்த பிறந்த தின திகதியை சற்று அலசி பார்த்தால் உண்மை புரிந்துவிடும். 


நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறக்கும் பொது, அவர்கள் நபி என்பதை யாரும் அறிந்ததில்லை. இன்னும், ஹிஜ்ரி கலண்டர் கணக்கெடுப்பும் இருக்கவில்லை. ஹிஜ்ரி கணக்கெடுப்பு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹிஜ்ரத்துக்கு பின் தான் துவங்குகிறது. அப்படியாயின் , இந்த பிறந்த நாள் , ரபியுல் அவ்வல் 12 ம் நாள் என்று எப்படி கணிப்பது ? ஹிஜ்ரத்துக்கு பின் தான் பிறந்தார்கள் என்று சொல்லப் போகிறார்களா ? இந்த பச்சை பொய்யை யாரும் 
ஏற்க மாட்டார்கள்.

எனவே, இந்த பிறந்த நாள் ரபியுல் அவ்வல் 12 ம் நாள் அடிப்படையே பொய்யாகும். இன்னும் இந்த பொய், நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்தை கொண்டாடுவதற்கு செய்யப்பட்ட ஒரு சதி என்பதை வரலாற்றை நல்ல முறையில் பார்த்தவர்கள் அறிந்துக் கொள்ளலாம். 

அதாவது, இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை முதலில் அறிமுக படுத்தியவர்கள் 4 வது நூற்றாண்டில் தோன்றிய  "பாத்திமத்" என்ற யூத வழிதோன்ரலில் வந்த ஒரு வழிகெட்ட பிரிவினர் ஆவார்கள். 

இவர்கள் அப்துல்லாஹ் பின் மைமூன் அல்கதாஹ் என்கின்ற யூதனின் சந்ததியினரே . இந்த வழிகெட்ட பிரிவினர் எகிப்தில் ஆட்சி நிருவியபொழுது தான் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறந்த நாளை, பிறந்த நாளாக திரித்துக் கூறி கொண்டாட்டங்களை ஆரம்பித்தனர். 

ஏனெனில், இவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு தான் நபித்துவத்துக்கு தகுதியானவர்கள் என்று வாதிட்டவர்கள். இவர்கள் தான் அல் அஸ்கர் என்ற பல்கலை கலகத்தையும் நிறுவினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்தில் சந்தோஷப் படும் இந்த யூத பரம்பரையின் சதியை அதே பரம்பரையில் வந்த ஷியாக்களும் இவர்களுடன் நெருங்கிய சகவாசம் செய்யும் சூபியாக்களும் கொண்டாட தொடங்கினர். இன்னும், இது 1910 ம் ஆண்டு தான் முதன் முதலில் உத்தியோகபூர்வ தேசிய விழாவாக துருக்கியினால் கொண்டாடப்பட்டது. 

இவ்வாறு, இந்த பொய்யின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொண்டாட்டத்தை மார்க்கமாக்க பலரும் அறிந்தும் அறியாமலும் முற்பட்டனர். இதில் இமாம் ஷுயுத்தி போன்றவர்களும் தப்பவில்லை. 

அந்த வகையில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசிப்பு பற்றி பொதுவாக மார்க்கம் வழியுறுத்தும் விடயங்களை இந்த குறிப்பிட்ட நாளை கொண்டாட ஆதாரமாக சுட்டிக் காட்டுகின்றனர். 

ஆனால், இந்த உம்மதுல் இஸ்லாமியாவில் , எங்கள் அனைவரையும் விட நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அதிகம் நேசித்த, அல்லாஹ்வினால் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தோழர்களாக தேர்ந்து எடுக்கப்பட்ட , நபியின் நேசிப்பில் முன்னுதாரணமாக திகழ்ந்த அந்த அருமை சஹாபாக்கள் யாரும் இந்த ரபியுல் அவ்வல் 12 ம் நாளை நபியை நேசிக்கும் பிறந்த நாளாக கொண்டாடவில்லை. அவர்களுக்கு பின் வந்த தாபியீன்கள் கொண்டாடவில்லை. அவர்களை தொடர்ந்த சலபுஸ் சாளிஹீன்கள் கொண்டாடவில்லை. 

ஏன் எமது சிறப்புக்குறிய அந்த நான்கு இமாம்களும், செய்யவுமில்லை, பதியவும் இல்லை . இன்னும், குத்புத் சித்தா வின் இமாம்கள் என்று போற்றப்படக் கூடிய அந்த ஆறு கிரந்தங்களின் இமாம்களான புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னு மாஜா , அபூ தாவுத் , நஸாயி ரஹீமஹுல்லாஹ் அஜ்மயீன், யாரிடமிருந்தும் நேரடியாக ஒரு அறிவிப்பும் கொண்டு வரவும் முடியாது, அவர்கள் செய்ததுமில்லை , பதியவும் இல்லை. 

இவர்கள் அனைவரும் இஸ்லாமிய மார்க்கத்தின் வரலாறை தந்தவர்கள். 
நபியின் நேசிப்பில் எங்கள் அனைவரையும் விட சிறப்பானவர்கள் . 

ஆனால், எமது சமூகம் இஸ்லாமிய வரலாறை இமாம்களிடம் இருந்து பெறாமல் மார்டின் லிங்க் போன்ற குப்பார்களின் , இஸ்லாமிய எதிரிகளின் கிதாபுகளில் இருந்து பெற்றால் இது தான் நிலைமை. 

கிறிஸ்த்தவ சமுதாய மக்கள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 25ம் நாள் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள். இவர்கள் ரபியுல் அவ்வல் 12 ஐ கொண்டாடுகிறார்கள்.  பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது கிருஸ்தவர்களின் மத அனுஷ்டானத்தை முன்மாதிரியாகக் கொண்டு எமது சமுதாயத்துக்குள் புதிதாகப் புகுத்தப்பட்ட வழிகேடுதான் என்பதை அறிந்து கொள்ளலாம் .

எனவே, வருடத்தில் ஒரு நாளை , நபியை நேசிக்கும் ஒரு நாளாக கிருஸ்தவர்களின் மத அனுஷ்டானத்தை முன்மாதிரியாகக் கொண்டு எடுத்துக் கொள்வது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பித் அத் என்பது சந்தேகமே இல்லை. 

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது பிறந்த நாளை பற்றி குறிப்பிடும் பொது பின்வருமாறு கூறுகிறார்கள் . 

" நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரதி திங்கள் தோறும் நோன்பு நோற்கும் வழக்குமுடையோராக இருந்தார்கள். அது பற்றி நபித்தோழர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவிய போது: "அந்நாளில் நான் பிறந்தேன். அதில்தான் என் மீது (அல்குர்ஆன்) இறக்கப்பட்டது" எனப் பதில் கூறினார்கள். (முஸ்லிம்).

இவ்வாறு தன்னுடைய பிறந்த நாளை நோன்பு நோற்பதில் கழித்த நபியின் முன்மாதிரி இருக்க , அந்த உத்தம நபியின் பிறந்த நாளை கொண்டாட , மௌலிது ஓத, பிறந்த நாளை சிறப்பிக்க பொது மார்க்க நிகழ்ச்சிகள் நடத்த, ஊர்வலம் செல்ல எங்கே ஆதாரம் இருக்கிறது ? 

நபியின் பிறந்த நாளில் அந்த நபியின் முன் மாதிரியை எடுக்காத இந்த சமூகங்கள், நிச்சயமாக பிறந்த நாளை அல்ல கொண்டாடுகிறார்கள் , நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறந்த நாளை தான் கொண்டாடுகிறார்கள் என்பது பட்டவர்த்தனமான உண்மையாகும். ஏனெனில், பித் அத்களை சுன்னாவாக பின்பற்றும் இந்த மக்கள், இறந்த நாளை, பிறந்த நாளாக கொண்டாடுவதில் புதுமை இல்லை. 

இந்த வரலாற்றின் அடிச்சுவட்டில் வந்த ஷீயாக்கள் தான், இன்றும் வீதி வீதியாக பட்டாசு கொழுத்தி , பாண்ட் வாத்தியம் இசைத்து ஊர்வலம் செல்வதை இலங்கையிலும் காணலாம். 

இதில் சற்று மாறுபட்டு, பச்சை கொடிகளை கையில் ஏந்தி, வீதி வீதியாக குளிர்பானங்களும் இனிப்புக்களும் பரிமாறப் பட்டு ஊர்வலம் கொண்டு செல்பவர்கள் தான் பச்சை தலைப்பாகை ஷீயா இஸ்மாயிலியா பிரிவினர் ஆவார்கள். இந்த மக்களோடு கை கோர்பவர்கள் தான் சூபியாக்கள் மற்றும் தரிக்காவாதிகள். இனம் இனத்தோடு தான் சேரும் என்பது போல வழிகேடர்கள் வழிகேடர்களுடன் இணைந்துக் கொண்டனர்.

இந்த பித் அத் ஐ  எகிப்தில் தேசிய கொண்ட்டாட நாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் இஹ்வானுல் முஸ்லிமீன் ஹசனுள் பன்னாஹ். அவர் தான் தேர்தலில் இருந்து வாபஸ் வாங்க வைத்த இரண்டு கோரிக்கைகளில் ஒன்று தான் இந்த மீலாத் விழாவை உத்தியோக பூர்வமாக தேசிய கொண்டாட்டம் ஆக்க கோரிக்கை வைத்தது.  இந்த செய்தி அல்இஹ்வானுல் முஸ்லிமூன் அஹ்தாதுன் ஸனஅத் அத்தாரீஹ்’  (இஹ்வானுல் முஸ்லிமீன், வரலாறு படைத்த சில நிகழ்வுகள்) என்ற நூலின் முதலாம் பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது !!. 

இவர் இந்த பாத்திமத் பிரிவால் உருவாக்கப்பட்ட அல் அஸ்கர் பல்கலைக் கழகத்தில் பயின்றவர் என்பது இங்கு குறிப்படத்தக்கது. இதே அநியாயம் இலங்கை நாட்டிலும் செய்யப்பட்டுள்ளது.


இஸ்லாமிய மார்க்கம் அல்குர் ஆன் அஸ்ஸுன்னா எ‌ன்ற இரண்டு அடிப்படைகளில் அமைந்துள்ள ஒரு கண்ணியமான மார்க்கமாகும். அந்த அல்குர் ஆணையும் அல்ஹதீஸையும் சரிவரப் புரிந்துக் கொள்ள அதற்கென ‌சில அடிப்படைகள் இருக்கின்றன. 


ஹதீஸ்களை விளங்கவும் அது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அம்சங்களையும் அணுவணுவாக அலசிடவும் உலமாக்கள் பல அடிப்படைகளை எமக்கு கற்றுத்தந்துள்ளார்கள். அவைகளை நாம் சரிவரப் புரிந்துகொண்டதன் பின்னர் ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன, அது தரும் போதனைகள் என்ன என்பன போன்ற பல விடயங்களை சரியாகவும் நேராகவும் புரிந்துக் கொள்ள முடியும். 

மார்க்கத்தை முறையாக படிக்க வேண்டும். முறையாக படித்தவர்களிடம் இருந்து , இல்மை சுமந்தவர்கள் என்று சிபாரிசு செய்யப்பட்டவர்களிடம் இருந்து மார்க்கத்தை பெற வேண்டும். இல்லையெனில் வழிகேட்டை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளும் கதை தான் நமது கதையாகிவிடும். 

எனவே நாம் இந்த  விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவதோடு அதனை சரிவர நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளை வெகுமதிகளாக பெற்றுக் கொள்ள முயல்வோமாக.  



எனவே அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! அல்குர் ஆணையும் அஸ்ஸுனாவையும் சஹாபாக்களின் விளக்கத்தில் எடுத்துவைக்கும் கருத்துக்களை ந‌ல்ல முறையில் அலசி நேரான பாதையில் செ‌ன்று வெற்றி பெற்றவர்களாக வாழ எம்மனைவருக்கும் அல்லாஹ்  தெளபீக் செய்தருள்வானாக ! 


அல்லாஹ் தான் அறிந்தவன். 

Saturday, October 20, 2012

சிறப்பான 10 நாட்களும் , தொடர்ச்சியாக நோன்புகள் வைக்காமல் இருப்பதும்


(துல்ஹஜ் மாதத்தின் முதல்) பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களைவிட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதும் மகத்தானதும் வேறு எதுவும் இல்லை.
எனவே அந்த நாட்களில் தஹ்லீல், தக்பீர், தஹ்மீது அதாவது { லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹுஅக்பர், அல்ஹம்து லில்லாஹ்} அதிகமாகக் கூறுங்கள் என நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறியதாக அப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள். (தப்ரானி)
எனவே அந்த நாட்களில் நோன்பு வையுங்கள் என்றும் இதற்கு ஆதாரமாக சில பலஹீனமான ஹதீசுகளையும் சிலர் சுட்டிக் காட்டுகின்றனர். 
இந்த சிறப்பான காலத்தில் நபி சள்ளல்லாஹு அலைஹி வசல்லம்  அவர்கள் காட்டித்தந்த அமல்களை செய்வதுதான் அல்லாஹ் சுபஹானஹுதாலா  விடம் கூலியை பெற்றுத்தருமே தவிர பித்அத்கள் அல்ல. 
'(துல்ஹஜ் மாதம்) பத்து நாட்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம்அவர்கள் நோன்பு நோற்று நான் கண்டதில்லை' என்று ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா  அறிவிக்கிறார்கள்.(முஸ்லிம்) . 
எனவே நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் எதனை தவிர்ந்து கொண்டாரோ அதனை நாமும் தவிர்ந்துக் கொள்வோம். இந்த விடயத்தில் நாமும் தவிர்ந்து கொள்வதுதான் நபி வழி ( சுன்னாஹ் ) ஆகும்.

Wednesday, October 17, 2012

26th oct-முஸ்லிம் மக்களின் பெருநாள் தினம்



சவூதி அரேபியாவின் அதி உயர் நீதிமன்றங்களின் சபையின் தீர்மானத்திற்கிணங்க ,இவ்வருட துல் ஹஜ் மாத முதல் தினம் , புதன் கிழமை , அக்டோபர் 17 உம் , அரபா தினம் 9 வது நாள் துல்ஹஜ் வியாழக்கிழமை , அக்டோபர் 25 ம் திகதி , முஸ்லிம் மக்களின் பெருநாள் தினம் 10 வது நாள் துல்ஹஜ் , வெள்ளிக்கிழமை , அக்டோபர் 26 ம் திகதியும் என , அகில இந்திய  ஸலப் கவுன்சில் அறிவித்துக் கொள்கிறது.

Friday, September 21, 2012

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமதிக்கும் படம் ஒரு வருந்தத்தக்க மற்றும் குற்றவியல் முயற்சி ஆகும்.

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை தற்காத்து நிற்க சிறந்த வழி அவரது ஸுன்னாக்களை பின்பற்ற வேண்டும் என்று ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா ஆல ஷேக் ஹபிதஹுல்லாஹ் ,
வலியுறுத்தினார். நபியவர்களின் பண்புகள் மற்றும் வாழ்க்கை வழி முறைகள் பரப்பப்பட்டதால் தான் இஸ்லாமியம் மதிப்புகள் பரவியது என்றும் கூறினார்.

ஷேக் அப்துல் அஸீஸ் பின் அ ப்துல்லா ஆல ஷேக் ஹபிதஹுல்லாஹ் வெளியிட்ட ஒரு அறிக்கையில் , நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அவமதிக்கும் படம் ஒரு வருந்தத்தக்க மற்றும் குற்றவியல் முயற்சி ஆகும்.

இது நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையோ இஸ்லாத்தையோ பாதிக்காது . ஏனெனில், நபியை யார் வெறுக்கிறாரோ அவர் தான் சந்ததி அற்றவர் ( இந்த உலகத்திலும் மறுமையில் இருந்தும் எல்லா நலவுகளில் இருந்தும் துண்டிக்கப்பட்டவர். ) அத்தியாயம் 108, வசனம் 3) என்று அல்லாஹ் சுபஹானஹு தாலாஆ அல்குர் ஆனில் கூறி விட்டான்.

ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா ஆல ஷேக் ஹபிதஹுல்லாஹ் அவர்கள் மேலும் கூறுகையில் இந்த குற்றவியல் முயற்சியை கண்டித்து முஸ்லிம்கள் அப்பாவி மக்களை கொலை செய்வதாலும் மற்றும் பொது சொத்து வசதிகளை தாக்குவதாலும் தங்கள் கோபத்தை முன்னிறுத்த அனுமதிக்க கூடாது.

மாற்றமாக முஸ்லிம்களின் செயல்பாடுகள் அல்குர் ஆன் மற்றும் ஸுன்னாவின் அடிப்படைகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். முஸ்லிம்கள் தங்கள் கோபத்தை இவ்வாறு வெளிப்படுத்தினார்கள் என்றால், இந்த படத் தயாரிப்பாளர்கள் அவர்களின் இலக்குகளை அடைந்துக் கொள்வார்கள்.

அனைத்து நபிமார்கள் , ரசூல்மார்களை கேலி செய்யும் செயலை , சமூக விரோத செயல் என ஷேக் அப்துல் அஸீஸ் பின் அப்துல்லா ஆல ஷேக் ஹபிதஹுல்லாஹ் அவர்கள் அனைத்து உலக நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுக்கு வேண்டுகோள் விடுத்தார் . 

Monday, September 3, 2012

ஜனாஸா.........



மரணித்தவருக்காக நாம் செய்யவேண்டிய அனைத்தையும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு நிறைவாக சொல்லித் தந்து விட்டார்கள். அவர்கள் ஒரு குறையும் வைக்கவில்லை. 

 وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ  ۖ ذَٰلِكَ مَا كُنتَ مِنْهُ تَحِيدُ

மரண அவஸ்தை உண்மையாகவே வந்து விட்டது. எதை விட்டு ஓடிக் கொண்டிருந்தாயோ அது இதுவே. ( 50:19).
நோயாளியைத் தரிசிப்பது, உயிர் பிரியும் தருவாயிலுள்ளவருக்கு ஷஹாதாக் கலிமாவைச் சொல்லிக் கொடுப்பது, அவர் அவருடைய கண்களைக் கசக்கி மூடுவது , அவருடைய ஜனாஸாவை அவசரமாக அடக்கம் செய்வது, அவருடைய கடனை அடைப்பது, அவருடைய ஜனாஸாவை கபன் செய்வது நபிவழியாகும்.ஜனாஸாவை முத்தமிடவும் முடியும்.

மரணித்த ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுவது கடமையாகும். மரணித்தவரின் நெருங்கிய உறவினர்கள் ஜனாஸாவைக் குளிப்பாட்டுவதே சிறந்ததாகும். கனவனை மனைவியும் மனைவியைக் கணவனும் குளிப்பாட்டலாம். 
நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் மகளுடைய ஜனாஸாவை குளிப்பாட்டுவது பற்றி உம்மு அதிய்யா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கும் போது ”அவர்களின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்பக்கம் போட்டோம்” என்று குறிப்பிடுகிறார். (அறிவிப்பவர்: உம்மு அதிய்யா ரலியல்லாஹு அன்ஹா  நூல்:முஸ்லிம் .
நீரையும் இலந்தை மர இலைகளையயும் கொண்டு மூன்று அல்லது ஐந்து முறைகள் ஜனாஸாவைக் கழுகலாம் அதை விட அதிகமாகவும் கழுகலாம். நீர் ஊற்றுவதை ஒற்றைப் படையாகவும் , இறுதியாக வாசனையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். கழுகும் போது வலதை முற்படுத்த வேண்டும். 

ஜனாஸாவை முழுமையாக மறைக்கும்படியாக அதனைக் கபன் செய்ய வேண்டும். அவர் அணிந்திருந்த ஆடையைத் தவிர வேறாடை எதுவுமில்லாவிட்டால் அணிந்திருந்த ஆடையைக் கொண்டேனும் அவரைக் கபன் செய்யவேண்டும். அளவு கடந்து விடாது கபனாடையை தேவையான அளவுக்கு அதிகப்படுத்திக் கொள்ளலாம். ஷஹீதாக மரணித்தவர் அவர் மரணிக்கும் போது அணிந்திருந்த உடையைக் கொண்டே கபன் செய்யப்படுவார். ஜனாஸாவிலும் கபன் துனியிலும் வாசனை பூசுவது ஆகுமாகும். 
குளிப்பாட்டி கபனிடுவதற்கு முன்னர் அவருடைய கையை தொழுவதற்கு தக்பீர் கட்டுவதைப்போன்று கட்டப்படுகிற இந்த நடைமுறை , மார்க்க ஆதாரம் இல்லாத செயல்களாகும். ஒரு மனிதன் மரணித்தால் அவனது இரு கைகளும் நீட்டியே வைக்கப்படும்.
நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யமன் சேதத்தின் பருத்தியினாலான வெண்ணிறமுள்ள மூன்று துணிகளால் கஃபன் செய்யப்பட்டார்கள். அம்மூன்றில் சட்டையோ தலைப்பாகையோ இருக்கவில்லை. புஹாரி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு 

மையத்தை சந்தூக் என்ற பல்லக்கில் வைத்து , பச்சை துணியால் மூடி , பூக்களினால் அலங்கரித்து , பன்னீர் தெளித்துக் கொண்டு , சில களிமாக்களையும் ஓதிக் கொண்டு செல்வது நபி வழியல்ல. பித்அத் ஆகும். மௌனமாக ஜனாஸாவை நடந்து அவசரமாக செல்லவேண்டும். ஜனாஸாவோடு நடப்பது அதை சுமப்பது என்பன நபிவழியாகும். ஆதற்கு முன்னால் செல்வதும் பின்னால் செல்வதம் சமமே. 

”ஜனாஸாவைச் (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள்; அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்.”என நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். புஹாரி: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு. 

”ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு: அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு’ என்று தூதர் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இரண்டு கீராத்கள் என்றால் என்ன?’ என வினவப்பட்டது. அதற்கவர்கள், ‘இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்றார்கள். புஹாரி அபூஹூரைரா ரலியல்லாஹு அன்ஹு.

மையித்துக்காகத் தொழுவது கடமையாகும். தற்கொலை செய்தவனுக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தலாம். ஜனாஸா ஆணாகவிருந்தால் தலைப்பக்கமாகவும் பெண்ணாகவிருந்தால் ஜனாஸாவின் நடுப்பக்கமாகவும் தொழுகை நடாத்துபவர் நிற்கவேண்டும். நான்கு முதல் ஒன்பது தக்பீர் வரை கூறலாம். 

இமாம் வந்து தொழுகையை ஆரம்பிக்கும் முன்னர் மக்கள் சப்புகளில் நின்றுக்கொண்டு " குள் "  சூராக்களை ஓதிக்கொண்டிருப்பது நபி வழியல்ல. இன்னும் அது பித்அத் ஆகும். ஜனாஸா தொழுகையின் பின்னரோ ஜனாஸாவை அடக்கம் செய்த பின்னரோ கூட்டாக துவா செய்வதும் பித்அத் ஆகும். அத்தோடு அடக்கிய பின்னர் தல்கீன் என்று சிலவற்றை ஓதுவது, குடத்தால் தண்ணீர் ஊற்றுவது, மல்லிகைப் பூவினால் கப்ரை அலங்கரிப்பது , 
அடையாளம் என்ற பெயரில் மையத்தின் பெயர் , இறந்த திகதி போன்றவை குறிக்கப்பட்ட பலகைகளை நாட்டுவது, உயரமாக மண்ணை நிறைத்து கப்ரை உயர்த்துவது , வரசையாக நின்று கைலாகு செய்து சலவாத்து ஓதுவது என்பனவும் பித்அத்கல் ஆகும். இவைகள் கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும். பெண் ஜனாசாவை திரையால் மறைத்துக் கொண்டு அடக்கம் செய்வதும் மற்றொரு பித்அத் ஆகும். கப்ரை ஒரு கல்லை கொண்டு அடையாள படுத்தலாம். 

ஜனாஸாவுக்காக ஓலமிட்டு அழுதல் நெருப்புப்பந்தங்களுடன், சந்தனக் குச்சிகளுடன் அதற்குப்பின்னால் செல்லுதல், ஆடைகளைக் கிழித்துக்கொள்ளல், ஜனாஸாவை சபித்தல் ஆகியன தடைசெய்யப்பட்டனவாகும். ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது ஆரம்பத்தில் ஆகுமாக்கப்பட்டு பின்னர் தடையாக மாற்றப்பட்ட சட்டமாகும். 

அல்லாஹ்வும் , அவனது தூதரும் கூறாமல் நம்மைப் போன்ற மனிதர்கள் தங்களின்
சுயநலனுக்காகவோ , நல்ல காரியம் என்ற பெயரில் நல்ல நோக்கத்துடன் என்ற காரணத்துடன் அல்லது அறியாமை காரணமாகவோ உருவாக்கியவை இஸ்லாமாக ஆகாது.

‘ நமது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் ‘ என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு நூல்: முஸ்லிம்

இறந்தவருக்காக மூன்றாம் ஃபாத்திஹா , ஏழாம்ஃபாத்திஹா , நாற்பதாம் ஃபாத்திஹா , கத்தம் , வருட ஃபாத்திஹாக்கள் , இறந்தவருக்காக ஹல்கா , திக்ருகள் , ராத்திபுகள் என்று பலவிதமான சடங்குகளையும் முஸ்லிம்களில் பலர்
செய்து வருகின்றனர். இவை அனைத்தும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

ஒருவர் மரணித்து விட்டால் அவரது குடும்பத்தினர் சோகத்திலும் , கவலையிலும் இருப்பார்கள். அவர்களின் கவலையை மேலும் அதிகரிக்கும் வகையில் இறந்த அன்றோ , மறு நாளோ தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். அந்தக் குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மனிதாபிமானமில்லாமல் அக்குடும்பத்தினரின் செலவில் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை. 
இறந்தவரின் வீட்டுக்கு நாம் சென்றால் அவர்களுக்குத் தேவையான உணவுகளைத் தயார் செய்து எடுத்துச் சென்று நாம் தான் அவர்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளதால் தமக்காக அவர்கள் உணவு சமைக்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள். 

ஜஃபர் பின் அபீதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணித்த செய்தியை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்குஅறிவித்து விட்டு ‘ ஜஃபரின் குடும்பத்தினருக்காக நீங்கள் உணவு தயாரியுங்கள் ‘ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹு நூல்கள்:அபூதாவூத் , அஹ்மத்
, திர்மிதி, இப்னுமாஜா 

இதன் அடிப்படையில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு மற்றவர்கள் தான் உணவு அளிக்க வேண்டுமே தவிர அவர்கள் வீட்டில் சாப்பிடக்கூடாது என்று அறியலாம். 

Saturday, July 21, 2012

Night 2 Taraweeh - Makkah

1st Ten Rakah led by Sheikh Saud ash Shuraim


HD


2nd Ten Rakah led by Sheikh Maahir al Mu'ayqali





HD






Witr led by Sheikh Maahir al Mu'ayqali




videos:http://www.haramainrecordings.blogspot.in/

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163