Showing posts with label கொசு தொல்லை. Show all posts
Showing posts with label கொசு தொல்லை. Show all posts

Saturday, September 29, 2012

பரவும் நோய்களுக்கு தீர்வு என்ன? என்ன செய்ய போகிறது அதிரை பேரூராட்சி?......


 அதிரையில் தற்பொழுது பரவலாக மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் தேங்கும் தண்ணீரிலிருந்து உண்டாகும் கொசுக்கள் மூலமாக நோய்கள் பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் நமதூரில் பல நோய்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. எனவே இதற்க்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தெருக்கள் மற்றும் வீட்டு அருகாமையில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள  வேண்டும். இந்நிலையில் நமதூரை சேர்ந்த ஒரு பெண்மணி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு எவ்வாறு இந்த காய்ச்சல் வந்திருக்க கூடும் கொசுக்களால் தானே. எனவே பேரூராட்சி தினமும் கொசுக்களை ஒழிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நமதூரில் நோய்கள் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் விரைவில் இது பற்றிய விவரங்களை பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்தல் வேண்டும். இதை அதிரை பேரூராட்சி செய்யுமா?...
பொறுத்து இருந்து பார்ப்போம்......     

Tuesday, August 14, 2012

இளம் வயதினரை விரும்பி கடிக்கும் கொசுக்கள்: ஆய்வில் புதிய தகவல்


மும்பை நகரில் கொசுக்களால் மலேரியா-டெங்கு காய்ச்சல் போன்ற பல்வேறு நோய்கள் பரவுகின்றன. கடந்த 2009-ம் அண்டு கொசுக்களால் 17.48 சதவீதம் பேரை மலேரியா காய்ச்சல் தாக்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த மும்பை மாநகராட்சி கொசுக்களை ஒழிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தது. 

இதன் பயனாக 2010 மற்றும் 2011-ம் ஆண்டுகளில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் வெகுவாக குறைந்தது. 2011-ம் ஆண்டு 6.25 சதவீதம் பேருக்கு மட்டும்தான் மலேரியா பரவி இருந்தது. 

இதேபோல் 2009-ம் ஆண்டு டெங்கு காய்ச்சல் 37.19 சதவீதம் பேரை தாக்கியது. 2011-ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 21.36 சதவீதமாக குறைந்தது. இந்த ஆய்வில் டெங்கு-மலேரியாவை பரப்பும் கொசுக்கள் 15 முதல் 30 வயதுக்குட்பட்டோரை மட்டுமே விரும்பி கடிப்பது தெரிய வந்துள்ளது. 

2011-ம் ஆண்டு மும்பையில் மலேரியாவால் பாதிக்கப்பட்டவர்களில் 42.84 சதவீதம் பேர் 15 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள். இதேபோல் டெங்கு காய்ச்சல் தாக்கியவர்களில் 64.40 சதவீதம் பேர் இளம் வயதினர்தான். 

இதுபற்றி ஆய்வு நடத்திய டாக்டர் ஜிதிந்தர் பாட்டியா கூறும்போது, மும்பை நகரில் கொசுக்கள் மூலம்தான் அதிக அளவில் நோய்கள் பரவுகின்றன. இதை தடுக்க அரசு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டன. இதன் காரணமாக 2009-ம் ஆண்டுக்கு பிறகு மலேரியா-டெங்கு காய்ச்சலின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகின்றன. 

என்றாலும் மலேரியா- டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுக்கள் 15 முதல் 30 வயதுக்குட்பட்ட இளம் வயதினரைத்தான் விரும்பி கடிக்கின்றன. கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் நடத்திய ஆய்வில் இது தெளிவாகத் தெரிகிறது என்றார்.

Wednesday, April 29, 2009

கொசுத்தொல்லை

நடுத்தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி பின்புறம் உள்ள குளத்தில் (செட்டியாகுளம் ) சாக்கடை நீரும் குப்பை கொட்டுவதாலும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. இதனால் அருகில் உள்ள விடுகளில் உள்ளவர்களுக்கு மலேரியா மற்றும் யானைக்கால் போன்ற பல நோய்கள் வர வாய்ப்புள்ளது . இந்த கொசுக்களை ஒழிக்க அங்கு குப்பைகள் கொட்டுவதை தடுக்கவேண்டும் . பேருராட்சி ஊழியர்களை வைத்து குப்பைகளை அகற்ற வேண்டும். அங்குகொசு மருந்து அடிக்கவேண்டும் என பேருராட்சி அதிகாரிகளை கேட்டுகொள்கிறோம்.

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163