Showing posts with label மவ்லித். Show all posts
Showing posts with label மவ்லித். Show all posts

Sunday, May 12, 2013

மீலாத் விழா ஒரு பார்வை ...


மீலாத் விழாவினுடைய அடிப்படை நோக்கம், நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவதும், அவர்களுடைய சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதும், மக்களை ஈமானின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் உணர்வூட்டுவதும், அவர்களின் நற்குணங்களை அறிந்து கொள்ளுவதும், சந்தோசத்தையும் முஹப்பைத்தையும் மற்றும் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதும், அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை சொல்லி காட்டுவதும், மக்களுக்கு உணவளித்தல் போன்ற நல்ல அமல்களை செய்வதும் அதன் மூலம் நன்றியை வெளிப்படுத்துவதும் ஆகும், என்று இந்த பிறந்த நாள் விழா எடுக்கும் மக்கள் கூறுகின்றனர். 

இதனை மேலோட்டமாக பார்த்தால் சிறப்பான காரியமாக தெரியும். ஆனால் உண்மை அவ்வாறல்லா . மார்க்கத்தில் பொதுவாக எல்லா காலங்களிலும் செய்வதற்கு சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு குறிப்பிட்ட நாளை மையமாக கொண்டு செய்வதற்கு ஆகுமாக்கி கொண்டுள்ளார்கள் என்பது உன்னிப்பாக கவனித்தால் தெரியும். 

சரி, இவர்கள் கண்ணோட்டதிலேயே இந்த விடயத்தை அணுகி பார்த்தால் அதிலும் உண்மை இல்லை. அதாவது , நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறந்த நாள் கொண்டாட்டங்களை மார்க்கத்தில் சிறப்பித்துக் கூறப்பட்ட அமலாக மாற்றுவதற்கு ஒரு சதி முயற்சியே அன்றி வேறில்லை. அதற்காக , ரபியுல் அவ்வல் 12 ம் நாளை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினமாக அறிவித்து கொண்டாடுகின்றார்கள். 

இந்த பிறந்த தினம் பற்றிய குறிப்பு ஆதாரப்பூர்வமான ஹதீசுகளில் இல்லை. ஆனால் அவர்கள் மரணித்த திகதி ரபியுல் அவ்வல் 12 ம் நாள் என்று ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் உள்ளன. இதனை இமாம் அத் தபரி, இமாம் இப்னு கஸீர் ரஹீமஹுல்லாஹ் அன்ஹும் அஜ்மயீன் பதிய வைத்துள்ளார்கள். இவர்கள் கொண்டாடும் இந்த பிறந்த தின திகதியை சற்று அலசி பார்த்தால் உண்மை புரிந்துவிடும். 


நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறக்கும் பொது, அவர்கள் நபி என்பதை யாரும் அறிந்ததில்லை. இன்னும், ஹிஜ்ரி கலண்டர் கணக்கெடுப்பும் இருக்கவில்லை. ஹிஜ்ரி கணக்கெடுப்பு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹிஜ்ரத்துக்கு பின் தான் துவங்குகிறது. அப்படியாயின் , இந்த பிறந்த நாள் , ரபியுல் அவ்வல் 12 ம் நாள் என்று எப்படி கணிப்பது ? ஹிஜ்ரத்துக்கு பின் தான் பிறந்தார்கள் என்று சொல்லப் போகிறார்களா ? இந்த பச்சை பொய்யை யாரும் 
ஏற்க மாட்டார்கள்.

எனவே, இந்த பிறந்த நாள் ரபியுல் அவ்வல் 12 ம் நாள் அடிப்படையே பொய்யாகும். இன்னும் இந்த பொய், நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்தை கொண்டாடுவதற்கு செய்யப்பட்ட ஒரு சதி என்பதை வரலாற்றை நல்ல முறையில் பார்த்தவர்கள் அறிந்துக் கொள்ளலாம். 

அதாவது, இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை முதலில் அறிமுக படுத்தியவர்கள் 4 வது நூற்றாண்டில் தோன்றிய  "பாத்திமத்" என்ற யூத வழிதோன்ரலில் வந்த ஒரு வழிகெட்ட பிரிவினர் ஆவார்கள். 

இவர்கள் அப்துல்லாஹ் பின் மைமூன் அல்கதாஹ் என்கின்ற யூதனின் சந்ததியினரே . இந்த வழிகெட்ட பிரிவினர் எகிப்தில் ஆட்சி நிருவியபொழுது தான் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறந்த நாளை, பிறந்த நாளாக திரித்துக் கூறி கொண்டாட்டங்களை ஆரம்பித்தனர். 

ஏனெனில், இவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு தான் நபித்துவத்துக்கு தகுதியானவர்கள் என்று வாதிட்டவர்கள். இவர்கள் தான் அல் அஸ்கர் என்ற பல்கலை கலகத்தையும் நிறுவினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்தில் சந்தோஷப் படும் இந்த யூத பரம்பரையின் சதியை அதே பரம்பரையில் வந்த ஷியாக்களும் இவர்களுடன் நெருங்கிய சகவாசம் செய்யும் சூபியாக்களும் கொண்டாட தொடங்கினர். இன்னும், இது 1910 ம் ஆண்டு தான் முதன் முதலில் உத்தியோகபூர்வ தேசிய விழாவாக துருக்கியினால் கொண்டாடப்பட்டது. 

இவ்வாறு, இந்த பொய்யின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொண்டாட்டத்தை மார்க்கமாக்க பலரும் அறிந்தும் அறியாமலும் முற்பட்டனர். இதில் இமாம் ஷுயுத்தி போன்றவர்களும் தப்பவில்லை. 

அந்த வகையில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசிப்பு பற்றி பொதுவாக மார்க்கம் வழியுறுத்தும் விடயங்களை இந்த குறிப்பிட்ட நாளை கொண்டாட ஆதாரமாக சுட்டிக் காட்டுகின்றனர். 

ஆனால், இந்த உம்மதுல் இஸ்லாமியாவில் , எங்கள் அனைவரையும் விட நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அதிகம் நேசித்த, அல்லாஹ்வினால் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தோழர்களாக தேர்ந்து எடுக்கப்பட்ட , நபியின் நேசிப்பில் முன்னுதாரணமாக திகழ்ந்த அந்த அருமை சஹாபாக்கள் யாரும் இந்த ரபியுல் அவ்வல் 12 ம் நாளை நபியை நேசிக்கும் பிறந்த நாளாக கொண்டாடவில்லை. அவர்களுக்கு பின் வந்த தாபியீன்கள் கொண்டாடவில்லை. அவர்களை தொடர்ந்த சலபுஸ் சாளிஹீன்கள் கொண்டாடவில்லை. 

ஏன் எமது சிறப்புக்குறிய அந்த நான்கு இமாம்களும், செய்யவுமில்லை, பதியவும் இல்லை . இன்னும், குத்புத் சித்தா வின் இமாம்கள் என்று போற்றப்படக் கூடிய அந்த ஆறு கிரந்தங்களின் இமாம்களான புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னு மாஜா , அபூ தாவுத் , நஸாயி ரஹீமஹுல்லாஹ் அஜ்மயீன், யாரிடமிருந்தும் நேரடியாக ஒரு அறிவிப்பும் கொண்டு வரவும் முடியாது, அவர்கள் செய்ததுமில்லை , பதியவும் இல்லை. 

இவர்கள் அனைவரும் இஸ்லாமிய மார்க்கத்தின் வரலாறை தந்தவர்கள். 
நபியின் நேசிப்பில் எங்கள் அனைவரையும் விட சிறப்பானவர்கள் . 

ஆனால், எமது சமூகம் இஸ்லாமிய வரலாறை இமாம்களிடம் இருந்து பெறாமல் மார்டின் லிங்க் போன்ற குப்பார்களின் , இஸ்லாமிய எதிரிகளின் கிதாபுகளில் இருந்து பெற்றால் இது தான் நிலைமை. 

கிறிஸ்த்தவ சமுதாய மக்கள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 25ம் நாள் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள். இவர்கள் ரபியுல் அவ்வல் 12 ஐ கொண்டாடுகிறார்கள்.  பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது கிருஸ்தவர்களின் மத அனுஷ்டானத்தை முன்மாதிரியாகக் கொண்டு எமது சமுதாயத்துக்குள் புதிதாகப் புகுத்தப்பட்ட வழிகேடுதான் என்பதை அறிந்து கொள்ளலாம் .

எனவே, வருடத்தில் ஒரு நாளை , நபியை நேசிக்கும் ஒரு நாளாக கிருஸ்தவர்களின் மத அனுஷ்டானத்தை முன்மாதிரியாகக் கொண்டு எடுத்துக் கொள்வது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பித் அத் என்பது சந்தேகமே இல்லை. 

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது பிறந்த நாளை பற்றி குறிப்பிடும் பொது பின்வருமாறு கூறுகிறார்கள் . 

" நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரதி திங்கள் தோறும் நோன்பு நோற்கும் வழக்குமுடையோராக இருந்தார்கள். அது பற்றி நபித்தோழர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவிய போது: "அந்நாளில் நான் பிறந்தேன். அதில்தான் என் மீது (அல்குர்ஆன்) இறக்கப்பட்டது" எனப் பதில் கூறினார்கள். (முஸ்லிம்).

இவ்வாறு தன்னுடைய பிறந்த நாளை நோன்பு நோற்பதில் கழித்த நபியின் முன்மாதிரி இருக்க , அந்த உத்தம நபியின் பிறந்த நாளை கொண்டாட , மௌலிது ஓத, பிறந்த நாளை சிறப்பிக்க பொது மார்க்க நிகழ்ச்சிகள் நடத்த, ஊர்வலம் செல்ல எங்கே ஆதாரம் இருக்கிறது ? 

நபியின் பிறந்த நாளில் அந்த நபியின் முன் மாதிரியை எடுக்காத இந்த சமூகங்கள், நிச்சயமாக பிறந்த நாளை அல்ல கொண்டாடுகிறார்கள் , நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறந்த நாளை தான் கொண்டாடுகிறார்கள் என்பது பட்டவர்த்தனமான உண்மையாகும். ஏனெனில், பித் அத்களை சுன்னாவாக பின்பற்றும் இந்த மக்கள், இறந்த நாளை, பிறந்த நாளாக கொண்டாடுவதில் புதுமை இல்லை. 

இந்த வரலாற்றின் அடிச்சுவட்டில் வந்த ஷீயாக்கள் தான், இன்றும் வீதி வீதியாக பட்டாசு கொழுத்தி , பாண்ட் வாத்தியம் இசைத்து ஊர்வலம் செல்வதை இலங்கையிலும் காணலாம். 

இதில் சற்று மாறுபட்டு, பச்சை கொடிகளை கையில் ஏந்தி, வீதி வீதியாக குளிர்பானங்களும் இனிப்புக்களும் பரிமாறப் பட்டு ஊர்வலம் கொண்டு செல்பவர்கள் தான் பச்சை தலைப்பாகை ஷீயா இஸ்மாயிலியா பிரிவினர் ஆவார்கள். இந்த மக்களோடு கை கோர்பவர்கள் தான் சூபியாக்கள் மற்றும் தரிக்காவாதிகள். இனம் இனத்தோடு தான் சேரும் என்பது போல வழிகேடர்கள் வழிகேடர்களுடன் இணைந்துக் கொண்டனர்.

இந்த பித் அத் ஐ  எகிப்தில் தேசிய கொண்ட்டாட நாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் இஹ்வானுல் முஸ்லிமீன் ஹசனுள் பன்னாஹ். அவர் தான் தேர்தலில் இருந்து வாபஸ் வாங்க வைத்த இரண்டு கோரிக்கைகளில் ஒன்று தான் இந்த மீலாத் விழாவை உத்தியோக பூர்வமாக தேசிய கொண்டாட்டம் ஆக்க கோரிக்கை வைத்தது.  இந்த செய்தி அல்இஹ்வானுல் முஸ்லிமூன் அஹ்தாதுன் ஸனஅத் அத்தாரீஹ்’  (இஹ்வானுல் முஸ்லிமீன், வரலாறு படைத்த சில நிகழ்வுகள்) என்ற நூலின் முதலாம் பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது !!. 

இவர் இந்த பாத்திமத் பிரிவால் உருவாக்கப்பட்ட அல் அஸ்கர் பல்கலைக் கழகத்தில் பயின்றவர் என்பது இங்கு குறிப்படத்தக்கது. இதே அநியாயம் இலங்கை நாட்டிலும் செய்யப்பட்டுள்ளது.


இஸ்லாமிய மார்க்கம் அல்குர் ஆன் அஸ்ஸுன்னா எ‌ன்ற இரண்டு அடிப்படைகளில் அமைந்துள்ள ஒரு கண்ணியமான மார்க்கமாகும். அந்த அல்குர் ஆணையும் அல்ஹதீஸையும் சரிவரப் புரிந்துக் கொள்ள அதற்கென ‌சில அடிப்படைகள் இருக்கின்றன. 


ஹதீஸ்களை விளங்கவும் அது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அம்சங்களையும் அணுவணுவாக அலசிடவும் உலமாக்கள் பல அடிப்படைகளை எமக்கு கற்றுத்தந்துள்ளார்கள். அவைகளை நாம் சரிவரப் புரிந்துகொண்டதன் பின்னர் ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன, அது தரும் போதனைகள் என்ன என்பன போன்ற பல விடயங்களை சரியாகவும் நேராகவும் புரிந்துக் கொள்ள முடியும். 

மார்க்கத்தை முறையாக படிக்க வேண்டும். முறையாக படித்தவர்களிடம் இருந்து , இல்மை சுமந்தவர்கள் என்று சிபாரிசு செய்யப்பட்டவர்களிடம் இருந்து மார்க்கத்தை பெற வேண்டும். இல்லையெனில் வழிகேட்டை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளும் கதை தான் நமது கதையாகிவிடும். 

எனவே நாம் இந்த  விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவதோடு அதனை சரிவர நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளை வெகுமதிகளாக பெற்றுக் கொள்ள முயல்வோமாக.  



எனவே அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! அல்குர் ஆணையும் அஸ்ஸுனாவையும் சஹாபாக்களின் விளக்கத்தில் எடுத்துவைக்கும் கருத்துக்களை ந‌ல்ல முறையில் அலசி நேரான பாதையில் செ‌ன்று வெற்றி பெற்றவர்களாக வாழ எம்மனைவருக்கும் அல்லாஹ்  தெளபீக் செய்தருள்வானாக ! 


அல்லாஹ் தான் அறிந்தவன். 

Tuesday, March 2, 2010

குர் ஆனை புறக்கணிக்கும் மவ்லித்

1. மவ்லித் வரிகள்:


اَلسَّلام عَلَيْكَ يَا مَاحِي الذُّنُوْبِ اَلسَّلاَمُ عَلَيْكَ يَا جَالِي الْكُرُوْبِ


பாவங்களை அழிப்பவரே! நும் மீது ஸலாம் !


கவலைகளை அகற்றுபவரே! நும் மீது ஸலாம் !


اَنْتَ غَفَّارُ الْخَطَايَا وَالذُّنُوْبِ الْمُوْبِقَاتِ


இழிவூட்டும் சிறுபிழைகள் யாவும் பொறுப்பது தாங்களன்றோ,



அழிவேற்படுத்தும் வன்பிழைகள் அனைத்தும் பொறுப்பது தாங்களன்றோ


كَفِّرُوْا عَنِّيْ ذُوْنُبِيْ وَاعْفُ لِيْ عَنْ سَيِّئَاتِ


என்னில் நிகழும் பெரும் பிழைகள் யாவையும் மன்னித் தருள்வீரே!


சின்னஞ் சிறிய தீமைகளை சீராய் பொறுத்தருள் புரிபவரே!


குர்ஆன் வரிகள்:


அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)



தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக! (அல்குர்ஆன் 39:53)



எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களைக் கைப்பற்றுவாயாக!” (அல்குர்ஆன் 3:193)



2. மவ்லித் வரிகள்:


يَا مَنْ تَمَادى وَاجْتَرَمْ تُبْ وَاعْتَرِفْ وَارْجُ الْكَرَمْ


وَلُذْ بِمَنْ حَلَّ الْحَرَمْ وَنُوْرُهُ عَمَّ الْبِلاَدِ


பாவத்தில் நீடித்திருப்பவனே! குற்றம் இழைத்துவிட்டவனே! நீ பாவமன்னிப்புக் கேள்! உன் குற்றத்தை ஒப்புக் கொள்!


நபியின் கொடைத்தன்மையை எதிர்பாத்துக் கொள்!


புனிதம் மிக்க ஹரம் ஷரீபின் பொன்னடி பதித்த பூமான் நபியிடம் புகலிடம் தேடிக் கொள். அவர்களின் பேரொளி அனைத்து நாடுகளையும் பொதுவாகச் சூழ்ந்து கொண்டது.


குர்ஆன் வரிகள்:


அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்றமாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்” என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 72 : 22)



அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 3 : 135)



3. மவ்லித் வரிகள்:


حُبُّكُمْ فِيْ قَلْبِنَا مَحْوٌ مِنْ رَّئِيْنَ الذَّنْبِ وَالْحَرَجِ


صَبُّكُمْ وَاللهِ لَمْ يَخِبِ لِكَمَالِ الْحُسَنِ وَالْبَهَجِ


தங்களின்பால் நாங்கள் வைத்திருக்கும் நேசம் எங்களின் இதயத்திலிருக்கிறது.


இது எங்களின் பாவக் கறைகளிலிருந்தும் குற்றத்திலிருந்தும் உள்ளவற்றை அழித்துவிடும்.


தங்களின் நேசன் முழுமையான அழகையும் ஒளியையும் பெறுகிற காரணத்தால் அல்லாஹ் மீது சத்தியமாக!


அவர் இழப்பினை அடையவில்லை.


குர்ஆன் வரிகள்:


அவர்கள் அல்லாஹ்விடம் திரும்பி, அவனிடம் பாவமன்னிப்புத் தேட வேண்டாமா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 5:74)



4. மவ்லித் வரிகள்:


اَنِّيْ عُبَيْدٌ ذَلِيْلٌ مِنْ عَثْرَتِيْ اَسْتَقِيْلُ


وَمَا يَخِيْبُ النَّزِيْلُ فِيْ حَيِّ رَاعِ الذَّمَامِ


நிச்சயமாக நான் இழிவான ஒரு சிற்றடிமையாவேன். என் குற்றங்களிலிருந்து என்னை நீக்கிவிடக் கோருகிறேன். பொறுப்புகளைப் பேணுகிற பூமான் நபியின் குழுவில் இறங்கியவர் வீணாகி விடமாட்டார்.


குர்ஆன் வரிகள்:


நான் உங்களுக்கு தீங்கு செய்யவும், நன்மை செய்யவும் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! நீர்) கூறுவீராக! (அல்குர்ஆன் 72:21)



அல்லாஹ் சோதிக்க நாடுபவரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற சிறிதும் நீர் (முஹம்மதே!) அதிகாரம் பெறமாட்டீர். அவர்களின் உள்ளங்களை அல்லாஹ் தூய்மையாக்க விரும்பவில்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவு இருக்கிறது. மறுமையில் கடும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 5:41)



5. மவ்லித் வரிகள்:


اَلشَّافِعُ الْمُنْقِذِ مِنْ مَهَالِكِ وَآلِهِ وَصَحْبِهِ وَمَنْ هُدِيَ


அழிவுகளிலிருந்து காப்பாற்றுகிறவரும் மன்றாடுகிறவருமான நபியவர்கள் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள் மற்றும் நேர்வழியாக்கப்பட்டவர்கள் மீதும் ஸலாவத்துச் சொல்லுங்கள்.


குர்ஆன் வரிகள்:


“மர்யமுடைய மகன் மஸீஹ் தான் அல்லாஹ்” என்று கூறியோர் (ஏக இறைவனை) மறுத்து விட்டனர். “மர்யமின் மகன் மஸீஹையும், அவரது தாயாரையும், பூமியில் உள்ள அனைவரையும் அல்லாஹ் அழிக்க நாடினால் அவனிடமிருந்து (அதைத் தடுக்க) சிறிதளவேனும் சக்தி பெற்றவர் யார்?” என்று (முஹம்மதே!) நீர் கேட்பீராக! வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவை களின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைப்பான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 5:17)



6. மவ்லித் வரிகள்:


صَلَوَاتُ اللهِ عَلى الْمَهْدِيْ وَمُغِيْثُ النَّاسِ مِنَ الْوَهَجِ


வழிகாட்டப்பட்டவரும் வாட்டும் நரக நெருப்பிலிருந்து மக்களைக் காப்பாற்றுவோருமான நபி(ஸல்) மீது அல்லாஹ்வின் ஸலவாத் உண்டாகுக.


குர்ஆன் வரிகள்:


“எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (அல்குர்ஆன் 2:201)



“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)



7. மவ்லித் வரிகள்


اِنِّيْ اِذَا مَسَنِّيْ ضَيْمٌ يُرَوِّعُنِيْ اَقُوْلُ يَا سَيِّدَ السَّادَاتِ يَا سَنَدِيْ


எனை நடுங்கச் செய்துவிடும் ஏதேனும் பேரிடர்கள் எனைத் தீண்டும் வேளையிலே இன்னுதவி கேட்டவனாய் அனைத்துலகத் தலைவர்க்கெல்லாம் அருந்தலைவர் ஆனவரே! இணையில்லா என்னிணைப்பே! என்றுரைப்பேன் நிச்சயமாய்.


குர்ஆன் வரிகள்:


அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்வோர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். (அல்குர்ஆன் 3 : 160)



“அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்! பொறுமையாக இருங்கள்! பூமி அல்லாஹ்வுக்கே உரியது. தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை அவன் உரிமையாக்குவான். இறுதி முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே சாதகமாக இருக்கும்” என்று மூஸா தமது சமுதாயத்திடம் கூறினார். (அல்குர்ஆன் 7 : 128)



8. மவ்லித் வரிகள்


اَنْتَ حَقًّا غِيَاثُ الْخَلْقِ اَجْمَعِهِمْ


மெய்யாகப் படைப்புக்கெல்லாம் மெய்க்காவல் தாங்கள் தான்


குர்ஆன் வரிகள்:


வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது என்பதையும், அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவுபவனோ இல்லை என்பதையும் நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 2:107)



8. மவ்லித் வரிகள்


ضَاقَتْ بِيَ اْلاَسْبَابْ فَجِئْتُ هذَا الْبَابْ


اُقَبِّلُ اْلاَعْتَابْ اَبْغِيْ رِضَا اْلاَحْبَابْ


وَالسَّادَةُ اْلاَخْيَارِ


எனக்கு காரணங்கள்(உபாயங்கள்) நெருக்கடியாகிவிட்டன. எனவே நபியே! தங்களின் இந்த வாசலுக்கு நான் வந்து விட்டேன். தங்களின் வாசலின் இந்தப் படிகளை முத்தமிடுகிறேன். நேசர்கள் உடையவும், நல்லவர்களான தலைவர்கள் உடையவும், பொருத்தத்தை தேடுகிறேன்.


குர்ஆன் வரிகள்:


(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும் போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்கி உங்களைப் பூமியில் வழித் தோன்றல்களாக ஆக்கியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? குறைவாகவே சிந்திக்கிறீர்கள்! (அல்குர்ஆன் 27:62)



9. மவ்லித் வரிகள்


فَرَوِّحُوْا رُوْحِيْ بِكَشْفِ الْكُرَبِ عِنَايَةً مِنْ فَضْلِكُمْ مُعْتَمَدِيْ


எனவே என் கவலையை அகற்றுவதன் மூலமாக என் ஆன்மாவை நிம்மதியுறச் செய்வீராக. என்னால் பற்றி நிற்கப்படுவதற்குரிய நபியே தங்களின் அருட்கொடையிலிருந்து நான் நாடுகிறேன்.


குர்ஆன் வரிகள்:


“இதிலிருந்தும், மற்றும் ஒவ்வொரு துன்பத்திலிருந்தும் அல்லாஹ்வே உங்களைக் காப்பாற்றுகிறான். பின்னர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள்; என்றும் கூறுவீராக! (அல்குர்ஆன் 6:64)



நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் அமைதியுறுகின்றன. கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நினைவால் தான் உள்ளங்கள் அமைதியுறுகின்றன.(அல்குர்ஆன் 13:28)



10. மவ்லித் வரிகள்:


قَدْ فُقْتُمُ الْخَلْقَ بِحُسْنِ الْخُلُقِ فَاَنْجِدُوا الْمِسْكِيْنَ قَبْلَ الْغَرَقِ


அழகிய நற்குணங்களின் மூலமாகத் தாங்கள் நிச்சயமாக படைப்பினங்களை விட மேம்பட்டு விட்டீர்கள். எனவே யான் கவலையில் மூழ்குவதற்கு முன்னரே இந்த ஏழையைக் காப்பாற்றுங்கள்.


குர்ஆன் வரிகள்:


“அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ மாற்றவோ அவர்களுக்கு இயலாது” என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 17:56)



11. மவ்லித் வரிகள்:


بَسَطْتُ كَفَّ فَاقَتِيْ وَالنَّدَمِ اَرْجُوْ جَزِيْلَ فَضْلِكُمْ وَالْكَرَمِ


என் வறுமை என் கைசேதம் ஆகிய கைகளை நான் விரித்துவிட்டேன். ஆகவே யான் தங்களின் மிகுதியான அருட்கொடை மற்றும் கொடைத்தன்மையை எதிர்பார்க்கிறேன்.


குர்ஆன் வரிகள்:


“எனது துக்கத்தையும், கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்விடமிருந்து அறிகிறேன்” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 12:86)



நபிமொழி:


நீ கேட்டால் அல்லாஹ்விடமே கேள்! நீ உதவி தேடினால் அல்லாஹ்விடமே உதவி தேடு! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : திர்மிதீ 2440)



12.மவ்லித் வரிகள்


وَانْظُرْ بِعَيْنِ الرِّضَالِيْ دَائِمًا اَبَدًا


கருணைமிகும் மாநபியே! காலமெல்லாம் நித்தியமாய் திருப்தியெனும் விழிகளினால் தேம்புமெனைப் பார்த்தருள்வீர்.


குர்ஆன் வரிகள்:


அல்லாஹ்வின் பொருத்தம் மிகப் பெரியது. இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:72)



அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தின் மீதும், அவனது திருப்தியின் மீதும் தனது கட்டடத்தை நிர்மாணித்தவன் சிறந்தவனா? அல்லது அரிக்கப்பட்டு விழுந்து விடும் கட்டடத்தை கரை ஓரத்தில் கட்டி அதனுடன் நரகத்தில் சரிந்து விழுந்து விட்டவன் சிறந்தவனா? அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன் 9 : 109)



13. மவ்லித் வரிகள்:


وَاعْطِفْ عَلَىَّ بِعَفْوِ مِنْكَ يَشْمَلُنِيْ فَاِنَّنِيْ عَنْكَ يَا مَوْلاَيَ لَمْ اَحِدِ


என்னெஜமான் ஆனவரே, ஏற்றமிகு நுமைத்தவிர அன்னியரை நிச்சயமாய் அழையேனே! ஆதலினால் மன்னவரே! தங்களுயர் மன்னிக்கும் அரிய பண்பால் என்னிடத்தில் கழிவிரக்கம் என்றென்றும் காட்டிடுவீர்.


குர்ஆன் வரிகள்:


அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? (அல்குர்ஆன் 3:135)



உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! பின்னர் அவனை நோக்கித் திரும்புங்கள்! என் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; அருள் நிறைந்தவன்”(என்றார்.) (அல்குர்ஆன் 11 : 90)



14. மவ்லித் வரிகள்:


إِنَّا نَسْتَجِيْرُ فِيْ دَفْعِ كُلِّ انْتِقَامِ


நிச்சயமாக நாம் ஒவ்வொரு தண்டனையையும் தடுத்திடும் விஷயத்தில் இவர்களிடத்தில் பாதுகாப்புத் தேடுகிறோம்.


குர்ஆன் வரிகள்:


தீமைகளைச் செய்தோரை அல்லாஹ்விடமிருந்து காப்பாற்ற யாரும் இருக்க மாட்டார்கள். ஒரு தீமைக்கு அது போன்றதே தண்டனை. அவர்களை இழிவும் சூழ்ந்து கொள்ளும். இருள் சூழ்ந்த இரவின் ஒரு பகுதியால் அவர்களின் முகங்கள் மூடப்பட்டது போல் இருக்கும். அவர்களே நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள் (அல்குர்ஆன் 10 : 27)



15. மவ்லித் வரிகள்:


நபியே! தங்களைக் கொண்டு யான் உதவி பெறுவதில் தங்களின் மீது சத்தியம் செய்கிறேன்.


நபிமொழிகள்:


அல்லாஹ் அல்லாவதர்களைக் கொண்டு சத்தியம் செய்வர் இணைவைத்துவிட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல் : அபூதாவூத் 2829)



சத்தியம் செய்பவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்! இல்லையெனில் வாய்மூடி இருக்கட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரீ 2679)



16. மவ்லித் வரிகள்


اَنْتَ سَتَّارُ الْمَسَاوِيْ وَمُقِيْلُ الْعَثَرَاتِ


எம்மில் நிகழும் தீங்குகளை இதமாய் மறைப்பவர் தாங்களன்றோ, நிம்மதி குலைக்கும் இன்னல்களை நீக்கிவிடுபவர் தாங்களன்றோ.


اَلسَّلام عَلَيْكَ يَا مُبْرِى السَّقَامِ


நோய்களைக் குணமாக்குபவரே நும் மீது ஸலாம்.


يَا مَنْ يَّرُوْمُ النَّعِيْمَا بِحُبِّهِ كُنْ مُقِيْمًا


وَلَوْ تَكُوْنُ سَقِيْمًا لَدَيْهِ بُرْعُ السَّقَامِ


நயீம் எனும் சுவனத்தை நாடுபவனே! நபியவர்களின் நேசத்தைப் பற்றிக் கொண்டு தங்குபவனாக நீ இரு. நீ நோயாளியாக இருந்தால் நபி(ஸல்) அவர்களிடம் நோயின் நிவாரணம் இருக்கிறது.


குர்ஆன் வரிகள்:


நான் நோயுறும் போது அவனே (அல்லாஹ்வே) எனக்கு நிவாரணம் தருகிறான். (அல்குர்ஆன் 26:80)



நபிமொழி:


மனிதர்களைப் படைத்து பராமரிப்பவனே! நோயைப் போக்கி, அறவே நோய் இல்லாதவாறு குணமளிப்பாயாக! நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தார்கள். (நூல் : புகாரீ 5675)



17. மவ்லித் வரிகள்


مُسْتَشْفِعًا نَزِيْلَ هذَا الْحَرَمِ فَلاَحِظُوْنِيْ بِدَوَامِ الْمَدَدِ


மதீனாவெனும் இந்த மகத்தான பூமியில் இறங்கிய மாநபியே! தங்களின் பரிந்துரையைத் தேடியவனாக தங்கள் முன் நிற்கிறேன். எனவே, நிரந்தர நல்லுதவி செய்வதின் மூலமாக என்பால் கடைக்கண் பார்வையைச் செலுத்துவீர்களாக.


குர்ஆன் வரிகள்:


“அல்லாஹ்வையன்றி பரிந்துரை செய்வோரை அவர்கள் கற்பனை செய்து கொண்டார்களா? அவர்கள் எந்தப் பொருளுக்கும் உடமையாளர்களாக இல்லாமலும், விளங்காதும் இருந்தாலுமா?” என்று கேட்பீராக! “பரிந்துரைகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே” என்று கூறுவீராக! வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் அவனுக்கே உரியது! பின்னர் அவனிடமே நீங்கள் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 39:43,44) மிகைத்தவனும், ஞானமிக்கோனுமான அல்லாஹ்விடமிருந்தே தவிர எந்த உதவியும் இல்லை. (அல்குர்ஆன் 3:126)



18. மவ்லித் வரிகள்


اَنْتَ مُنْجِيْنَا مِنَ الْحُرَقِ مِنْ لَهِيْبِ النَّارِ وَاْلاَجَجِ


ذَنْبُنَا مَاحِيْ لَيْمَنَعُنَا مِنْ ذُرُوْفِ الدَّمَعِ وَالْعَجَجِ


நரக நெருப்பின் ஜவாலையினாலும் அதன் கடும் வெப்பத்தினாலும் கரிந்து போகாமல் எங்களை காப்பாற்றுவது தாங்களே ஆவீர்! எங்களின் பாவங்கள் அழிப்பவரே! தாங்கள் பாவங்களை அழிப்பது எங்களை கண்ணீர் வடிப்பதிலிருந்தும், கதறுவதிலிருந்தும் தடுத்துவிடும். நபியே! தங்களின் பரந்த மனப்பான்மையினால் கரிக்கும் நரக நெருப்பின் கொழுந்து விட்டெரியும் ஜவாலையை அணைத்து விடுங்கள். தங்களின் இரக்கத் தன்மையால் என் ஈரலின் வெப்பத்தைக் குளிரச் செய்யுங்கள்.


குர்ஆன் வரிகள்:


யாருக்கு எதிராக வேதனை பற்றிய கட்டளை உறுதியாகி விட்டதோ அவனா? (சொர்க்கம் செல்வான்?). நரகத்தில் உள்ளவனை நீர் விடுவிப்பீரா? (அல்குர்ஆன் 39:19)



“எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!” என்று அவர்கள் கூறுவார்கள். (அல்குர்ஆன் 3:16)

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163