Saturday, May 28, 2011

திருக்குர்ஆன் மாநாடு- மூதல் நாள் துளிகள்....

அதிரை பைத்துல்மால் நடத்தும் 13 ஆவது திருக்குர்ஆன் மாநாடு அதிரை புது பள்ளிவளாகத்தில் 27,28,29-05-2011 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறுகிறது. அதன் தொடக்க நாளன நேற்று மாநாட்டு திடலில் நடந்த விஷயங்கள்...
மௌலவி.அப்துல் ஹமீது பாஜில் பாகவி அவர்கள்
மௌலவி அபுதாகிர் பாஜில் பாகவி அவர்கள். 
மழை பெய்ததால் லேப்டாப் நனையாமல் இருக்க குடையால் மூடிருக்கும் காட்சி. 
காலை : 
நேரம்:9 மணி 
  • காலையில் சிறுவர்களின் கிராத் போட்டியுடன் மாநாடு துவங்கியது.
  • போட்டியில் மாணவ,மனைவியர்,சிறிய குழந்தைகள் பங்கு பெற்று தங்களது குரல் வளத்தை வெளிபடுத்தினார்கள்.
  • பகல் 12 மணிவரை நடந்த போட்டியில் பல மாணவ,மனைவியர்,குழந்தைகள் பங்கு பெற்று திருக்குர்ஆணை அழகிய முறையில் ஓதினார்கள்.
  • சிறிய குழந்தைகள் அழகிய முறையில் ஓதியது. கேட்போரை மெய்சிலிர்க்க வைத்தது.  

மாலை:
நேரம்:4 மணி 
  • 4 மணிக்கு மாநாட்டு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டதால் கூடம் அலைமோதியது.
  • குறிப்பாக பெண்கள்  பகுதியில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
  • மக்ரிப் தொழுகைக்கு பின் வண்டிபேட்டை இமாம் நூர் அவர்கள் கிராத் ஓத...
  • அப்துல்காதர் சார் தொகுத்து வழங்க.வக்கீல் முனைப் வரேவேற்புரை வாசித்தார்.
  • அப்துல் காதர் ஆலிம் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
  • புதுப்பள்ளி இமாம் யூசுப் ஆலிம் அவர்கள் முன்னிலை வகித்தார்கள்.
  • அப்துல் காதர் ஆலிம் அவர்கள் சில மணித்துளிகள் தலைமை உரையாற்றினார்கள்.
  • பின் சிறப்பு விருத்தினர் மௌலவி.அப்துல் ஹமீது பாஜில் பாகவி அவர்கள் இறைமறை கூறும் மனித உரிமைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
  • ஐநா சபை போடுகின்ற சட்டத்தை மட்டும் ஏற்கும் நாம் குர்ஆண் கூறும் சட்டத்தை ஏன் ஏற்பதில்லை என்பது பற்றியும் குர்ஆண் கூறும் சட்டத்திற்கும் மனிதன் விதிக்கும் சட்டத்திற்கும் உள்ள வித்தியாசங்களை அடுக்கினார். இவர் உரையாற்றும்போது மாநாட்டு  திடலே அமைதியாக இவரின் பேச்சில் மயங்கியது.
  • இவருக்கு அடுத்த படியாக மௌலவி.அபுதாகிர் பாஜில் பாகவி அவர்கள் இறைமறை போற்றும் இல்லறவியல் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
  • கிரிக்கெட்டில் 20-20 ஓவர் போல ஆண்களுக்கும் பெண்களுக்கும் 10-10 சட்டத்தை கூறினார்.
  • இவருடைய நகைச்சுவை கலந்த பேச்சால் மாநாட்டு திடலே சிரிப்பு  வெள்ளத்தில் மூழ்கியது.
  • இவரின் சிரிப்பு வெள்ளத்தில் மூழ்கிய மக்கள் வெளியில் வருவதற்குள் மழை பெய்ய ஆரம்பித்தது.
  • மழை பெய்தால் பேயட்டும் நாங்கள் நகர மாட்டோம் என்பது போல வந்தவர்கள் ஆசயாமல் நின்று மாநாடு தொடர்ந்தது.
  • இறுதியாக எப்பொழுதும் திருக்குர்ஆண் மாநாட்டில் உரையாற்றும் S.K.M ஹாஜா முஹைதீன் காசிபி அவர்கள் இறைமறை கூறும் மனித நேயம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
  • தமக்கு இல்லாவிட்டாலும் அடுத்தவனுக்கு கொடுகின்ற பண்பை வளர்த்த ரசூல் (ஸல்) அவர்களின் உம்மத்தின் இன்றைய நிலை பற்றி வருந்தினார்.
  • இறுதியாக காலையில் நடந்த கிராத் போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • இறுதியாக கப்பார ஓதி முதல் நாள் நிகழ்சிகள் நிறைவு பெற்றனர்.
  • வெளிநாட்டு வாழ் அதிரை மக்கள் காண்பதற்காக முஸ்லிம்மலர்,அதிரை xpress ஆகிய இனைய தளங்களில் நேரடி ஒளிப்பரப்பு செய்யபட்டது.
இரண்டாம் நிகழ்ச்சிகள் இன்று மாலை 4 மணியளவில் நடைபெறவுள்ளது. பெண்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதிரை மக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இன்றும் முஸ்லிம்மலர்,அதிரை xpress இணையதளங்களில் நேரடி ஒளிப்பரப்பை காணலாம்.வெளிநாட்டு வாழ் அதிரை மக்கள் நமதூரில் நடக்கும் மானத்தை நேரடியாக கண்டு களிக்குமாறு முஸ்லிம்மலர் சார்பில் கேட்டுகொள்கிறோம்.
தகவல்: முஸ்லிம்மலர் ஹசன்.  
           

1 comments:

தாஜுதீன் (THAJUDEEN ) said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

தம்பி ஹசன்,

நல்ல தொகுப்பு, தகவல் பகிர்வுக்கு மிக்க நன்றி.

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163