ரஷியா செவ்வாய் கிரகத்தில் உள்ள சந்திரனின் ஆராய்ச்சிக்காக ஆளில்லா போபோஸ் கிரவுண்டு என்ற விண்கலத்தை அனுப்பியுள்ளது. 200 கிலோ எடையுள்ள அந்த விண்கலம் தன் பணியை அங்கு முடித்து விட்டது. தற்போது அதன் ஆயுட் காலம் முடிவடைந்ததை தொடர்ந்து பூமிக்கு மீண்டும் திரும்புகிறது.
பூமியின் உட்காற்று பாதைக்குள் நுழையும் போது அது 20 முதல் 30 துண்டுகளாக உடையும். அவற்றின் துண்டுகள் பூமியில் மோதும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு வருகிற ஜனவரி மாதம் 6 முதல்
19-ந்தேதிக்குள் நடைபெறும் என ரஷியாவின் விண்வெளி மையம் தெரிவித்துள்ளது.
பூமியை நெருங்கும் போது அதன் துண்டுகள் நெருப்பு பிழம்பாக மாறும். அவை உடைந்து சிதறுவதால் வெளியேறும் நச்சு எரிபொருள், மற்றும் கதிரியக்க பொருளால் மக்களுக்கு எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment