தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வை 7 லட்சத்து 20 ஆயிரம் மாணவ- மாணவிகள் எழுதி னார்கள். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தனி தேர்வர்களாக எழுதினார்கள். விடைத்தாள்கள் திருத் தும் பணிகள் கடந்த மாதம் 19-ந்தேதி முடிவடைந்தது. அதன் பிறகு டேட்டா சென்டர்கள் மூலம் மதிப்பெண்களை பதிவு செய்யும் பணியும், பிழைகளை திருத்தும் பணியும் நடந்தது.
அனைத்து பணிகளும் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. தேர்வு முடிவுகள் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. அதே நேரத்தில் பள்ளிகளிலும் மாணவர்கள் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். இதற்காக பள்ளிகளுக்கான மதிப்பெண் பட்டியல், சி.டி.க்கள் இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டன.
இணைய தள முகவரி : www.maalaimalar.com. அரசு இணைய தளங்களிலும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுகிறது. tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in, dge3.tn.nic.in ஆகிய இணைய தளங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
பிளஸ்-2 தேர்வு எழுதியுள்ள நமதூர் மாணவர்கள் மற்றும் அணைத்து மாணவர்களுக்கு முஸ்லிம்மலர் சார்பில் நல்ல மதிப்பெண்கள் பெற வாழ்த்துகிறோம்......
0 comments:
Post a Comment