Saturday, April 30, 2011

சீறி எழுந்த மக்கள் திணறியது அதிரை........

நமதூரிளிருந்து பட்டுகோட்டை சென்ற பேருந்து நிறுத்தி வைக்க பட்டுள்ளது . அருகில் நமதூர் இளைஞர்கள். 
  

காவல்துறை ஆய்வாளரிடம் வேண்டுகோள் விடுத்த பொது திரளாக நின்ற மக்கள்   

பட்டுகோட்டையிலிருந்து அதிரை வந்த பேருந்து சாலை ஓரம் நின்ற காட்சி....



அதிரையில் நேற்று காலை 9 மணியளவில் மின்தடை ஏற்பட்டது. பொது மக்கள் வழக்கம் போல் தடை செய்வது தான் என்று விட்டு விட்டார்கள். ஜும்மா முடிந்தும் வரவில்லை மின்சார வாரியத்திற்கு போன் செய்து கேட்டபொழுது 5 மணிக்கு வந்து விடும் என்று பதிலளித்து விட்டு போனை கிலே எடுத்து வைத்து விட்டனர். பொறுமையாக  இருந்த நமதூர் மக்கள். இஷா தொழுது முடித்ததும் வாராததால் ஆத்திரம் அடைந்து சாலை மறியலில் ஈடு பட்டனர். இதனால் அதிரை-பட்டுகோட்டை சாலை முடக்கப்பட்டது. போலிசார் பேச்சுவார்த்தைக்கு பலன் கிடைக்காததால் தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். தாசில்தாரின் சமாதான பேச்சு வார்த்தையால் சாலை மறியலை கைவிட்டனர். இதையடுத்து இரவு 12.45 க்கு மின்சாரம் வந்தது. எனினும் இடையே தடைபட்டு வந்தது. ஒரு வழியாக காலை 7 மணியளவில் இருந்து இது வரை மின் தடையில்லாமல் இருக்கிறது. மின்சார வாரியத்தின் அசாதாரண போக்கால் நேற்று அதிரையில் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டது. இது போன்று இனி நடக்காது என்று அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.அதை இனியாவது அதிரை மின்சார வாரியம் காப்பற்றுமா? அதிரை சமுக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.......             

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163