Tuesday, March 29, 2011

வரும் ஆனா வராது.................................

  •  இதை நாம் வடிவேல் காமெடியில் தான் கேட்டு இருக்கிறோம் ஆனால் நமதூர் மருத்துவர்களை பார்த்தால் இதை தவிர வேறெதை சொல்ல முடியும்.உடல் நிலை சரியில்லை என்று நாம் மருத்துவர்களை தேடி செல்கிறோம். செல்ல முடியாமல் போனால் வீட்டிற்கு அழைத்து வருவதுதான் வழக்கம். ஆனால் நமதூர் மருத்துவர்கள் வீட்டிற்கு ஆபத்தான நேரத்தில் அழைத்தால் கூட வருவதில்லை என்பதை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது. மருத்துவ சேவை என்பது பொது சேவையாகும். ஆபத்தான் நேரத்தில் உதவுவதுதான் அவர்களின் பணியாகும். 
  • நமதூரில் நடந்த சம்பவம்: சில நாட்களுக்கு முன் இரவில்  பிள்ளை பெற்ற பெண் ஒருவர்க்கு வலிப்பு ஏற்பட்டது. உடனே நமதூர் மருத்துவர்களை வீட்டிற்கு அழைத்த போது வர மறுத்து விட்டனர். வலிப்பு அதிகமாகி தன்னுடைய நாக்கை இரத்தம் ஊற்றும் அளவிற்கு கடித்துள்ளார் அந்த பெண். இவ்வளவு ஆபத்தையும் உணர்த்த மருத்துவர்கள் கடைசி வரை அந்த பெண்ணின் வீட்டிற்கு வரவே இல்லை என்பது வருத்தத்திற்கு உரிய செயலாகும்.
  • சமூக சீர்திருத்த வாதிகளே! எல்லாதிற்கும் இயக்கம் பேசும் இயக்கவாதிகளே! நமதூரில் உள்ள மருத்துவர்களை ஆபத்தான நேரத்தில் உதவ வலியுறத்த வேண்டும். இல்லையேல் நமதூர் ஷிபா மருத்துவமனயில் சமூக அக்கறையுள்ள மருத்துவர்களை கொண்டு வரே வேண்டும். நமதூர் மாணவர்களை மருத்துவத்திற்கு படிக்க முயற்சி செய்ய வேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகும்.                

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163