Monday, April 23, 2012

உலகமே பாலஸ்தீனத்திற்காக வருந்துகிறது-ஆனால், அந்த நாட்டு அதிபரோ இலங்கையில்

கொழும்பு: இஸ்ரேலின் இனவெறித் தாக்குதலால் சிதிலமடைந்துள்ள பாலஸ்தீனத்தின் அதிபர், தமிழர்கள் மீது இனவெறியைக் காட்டி வரும் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பாலஸ்தீன அதிபர் மகமூத் அப்பாஸ், தனது 2 நாள் இலங்கை பயணத்தை இன்று தொடங்கினார். பாலஸ்தீனத்திற்கு ஆதரவு அளிக்குமாறு இலங்கையை கேட்டுக் கொள்வதற்காக அவர் வந்துள்ளார். நாளை அவர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசுகிறார். இலங்கையுடன் இரண்டு ஒப்பந்தங்களையும் பாலஸ்தீனம் செய்து கொள்ளவுள்ளது.

இஸ்ரேலின் இனவெறியிலிருந்தும், துவேஷத்திலிருந்தும் இன்னும் மீள முடியாமல் தவித்து வரும் ஒரு பரிதாப தேசம் பாலஸ்தீனம். அதேபோலத்தான் சிங்களத்தின் இனவெறியிலிருந்தும், துவேஷத்திலிருந்தும் மீள முடியாமல் தவிக்கும் பிரதேசம் ஈழம். பாலஸ்தீனர்களும், தமிழர்களும் இஸ்ரேல் மற்றும் இலங்கையின் கையில் சிக்கி பட்ட துயரங்களும், அடைந்த இழப்புகளும் சொல்லில் வடிக்க முடியாதது.

இன்னும் சொல்லப் போனால் பாலஸ்தீனியர்களின் கஷ்டமும், ஈழத் தமிழர்கள் வடித்த ரத்தமும் ஒன்றுதான் என்பார்கள். இப்படிப்பட்ட நிலையில் இப்போதுதான் ஒரு இன அழிப்பை நடத்தி முடித்துள்ள இலங்கைக்கு பாலஸ்தீன அதிபர் வந்துள்ளது பலரையும் விழி விரியச் செய்துள்ளது.

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163