அஸ்ஸலாமு அலைக்கும்,
அதிரையில் பல முஸ்லிம் கல்வி நிறுவனங்கள் இருகின்றன. அங்கு பயிலும் முஸ்லிம் மாணவர்களின் பங்கு 80 %, அனால் அங்கு பணிபுரிவதில் முஸ்லிம்களின் பங்கு மிக குறைவு. அதில் அதிரை முஸ்லிம்களின் பங்கு ஒரு சில பேர்கள் மட்டுமே. இதற்கு காரணம் தான் என்ன?
ஆசிரியர் பணி தான் மிக சிறந்த பணி. அத்தகைய பணியில் நமதூர் முஸ்லிம்கள் பங்குபெற வேண்டும்.
நமதூர் முஸ்லிம்கள் பங்கு பெறாததற்கு என்ன காரணம்?.
அதிரை முஸ்லிம்கள் கல்வியில் கவன குறைவா?
அதிரையில் கல்வி நிறுவனத்தில் வேலை செய்ய ஏதேனும் தடையா?
இது உங்கள் கவனத்திற்கு.
நாம் இன்று வெளிநாடு செல்கிறோம். அங்கு இதை விட அதிக சம்பளம் தான் கிடைக்கிறதா?. இங்கு குறைந்த சம்பளம் எனில் மாற்றுமத சகோதர்கள் மட்டும் நல்லநிலையில் இருக்கிறார்களே ஏன்?.
மாணவ சமுதாயமே, இனியாவது இந்த நிலை மாறி நல்ல முறையில் கல்வி கற்று. நமதூர் முஸ்லிம்களுக்கு ஒரு எடுத்துகாட்டாக இருந்து பல ஆசிரியர்களை நாம் உருவாக்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்!
0 comments:
Post a Comment