Saturday, May 16, 2009

எஸ்.எஸ்.எல்.சி.தேர்வு முடிவு 28-ந்தேதி வெளிவருகிறது

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 6541 பள்ளியில் இருந்து 8 லட்சத்து 42 ஆயிரத்து 350 மாணவ- மாணவிகள் பரீட்சை எழுதினார்கள். இவர்களில் 4 லட்சத்து 16 ஆயிரத்து 512 பேர் மாணவர்கள். 4 லட்சத்து 25 ஆயிரத்து 835 பேர் மாணவிகள் பத்தாம் வகுப்பு மெட்ரிக்குலேசன் பாடத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 287 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

சென்னையில் 16,369 பேர் பரீட்சை எழுதினார்கள். 10-ம் வகுப்பு ஆங்கிலோ இந்தியன்பாடத்திட்டதின் கீழ் 4697 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி உள்ளனர்.

ஓ.எஸ்.எல்.சி. பாடத்திட்டம் கீழ் 1361 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்.

விடைத்தாள் திருத்தும் பணி முடிந்து மதிப்பெண் பதிவு செய்யும் பணி தீவிர மாக நடந்து வருகிறது. ஓரிரு நாட்களில் இந்த பணியும் நிறைவடைகிறது. பிளஸ்-2 தேர்வு முடிவு இந்த ஆண்டு தாமதமாக வெளியிடப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் நடந்ததால் கடந்த ஆண்டை விட 5 நாட்கள் தாமதமாக முடிவு வெளியானது.

இதனால் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு தள்ளிப்போகிறது. வருகிற 28-ந்தேதி தேர்வு முடிவு வெளியாக வாய்ப்பு உள் ளது. அதற்கு முன்னதாக வெளியிட தேர்வுத் துறை தீவிர பணியில் ஈடுபட்டு வருகிறது.

பிளஸ்-2 மாணவர்களுக்கு 25-ந்தேதி மதிப்பெண் பட்டியல் வழங்கப்படுகின்றன. டேட்டா சென்டரில் மதிப்பெண் பட்டியல் பிரிண்ட் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. 22-ந்தேதிக்குள் இந்த பணிகள் முடியும் அதன் பிறகு மாவட்ட வாரியாக மதிப்பெண் பட்டியல் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163