Saturday, September 29, 2012

பரவும் நோய்களுக்கு தீர்வு என்ன? என்ன செய்ய போகிறது அதிரை பேரூராட்சி?......


 அதிரையில் தற்பொழுது பரவலாக மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் தேங்கும் தண்ணீரிலிருந்து உண்டாகும் கொசுக்கள் மூலமாக நோய்கள் பரவ ஆரம்பித்துள்ளது. இதனால் நமதூரில் பல நோய்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளன. எனவே இதற்க்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தெருக்கள் மற்றும் வீட்டு அருகாமையில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள  வேண்டும். இந்நிலையில் நமதூரை சேர்ந்த ஒரு பெண்மணி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சியில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு எவ்வாறு இந்த காய்ச்சல் வந்திருக்க கூடும் கொசுக்களால் தானே. எனவே பேரூராட்சி தினமும் கொசுக்களை ஒழிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். நமதூரில் நோய்கள் பரவாமல் இருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் விரைவில் இது பற்றிய விவரங்களை பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்தல் வேண்டும். இதை அதிரை பேரூராட்சி செய்யுமா?...
பொறுத்து இருந்து பார்ப்போம்......     

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163