இந்தியா-இலங்கை அணிகள் மோதிய உலக கோப்பை இறுதிப்போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. “டாஸ்” வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் இலங்கை அணி 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன் குவித்தது. ஜெயவர்த்தனே சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அவர் 103 ரன்னும், சங்ககரா 48 ரன்னும், குலசேகரா 32 ரன்னும், பெனரரா 9 பந்தில் 22 ரன்னும் எடுத்தனர்.ஜாகீர்கான், யுவராஜ்சிங் தலா 2 விக்கெட் கைப்பற்றினார்கள்.
பின்னர் விளையாடிய இந்தியா 48.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து 6 விக்கெட்டில் வென்று உலக கோப்பையை கைப்பற்றியது. கேப்டன் டோனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அவர் 79 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 91 ரன்னும் (அவுட்இல்லை), காம்பீர் 97 ரன்னும், கோலி 35 ரன்னும் எடுத்தனர்.
இதனால் நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர்.
நமதூரில் நேற்று இரவு வெடி வெடித்து கொண்டாடினர்.
உலக கோப்பை இறுதி ஆட்டத்தின் சில புகைப்படங்கள்:
பின்னர் விளையாடிய இந்தியா 48.2 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 277 ரன் எடுத்து 6 விக்கெட்டில் வென்று உலக கோப்பையை கைப்பற்றியது. கேப்டன் டோனி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அவர் 79 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் 91 ரன்னும் (அவுட்இல்லை), காம்பீர் 97 ரன்னும், கோலி 35 ரன்னும் எடுத்தனர்.
இதனால் நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மிதக்கின்றனர்.
நமதூரில் நேற்று இரவு வெடி வெடித்து கொண்டாடினர்.
உலக கோப்பை இறுதி ஆட்டத்தின் சில புகைப்படங்கள்:
0 comments:
Post a Comment