தமிழகத்தில் வருகிற 13ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது இதனால் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சியினர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அதிரையும் விதிவிலக்கு அல்ல. பட்டுகோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் ஏன்.செந்தில்குமாரை ஆதரித்து நேற்று முன்தினம் இரவு விஜயகாந்த் நமதூர் அண்ணா சிலை அருகே பேசினார். காங்கிரஸ் வேட்பாளர் ஏன்.ஆர்.ரெங்கராஜன் நேற்று மாலை முதல் இரவு வரை அதிரை முழுவதும் வாக்கு சேகரித்தார்.அவர் செல்லும் வாகனம் முன் இசை முழங்க வாக்கு சேகரித்தது நமதூர் மக்களுக்கு கந்தூரி போல் காட்சியளித்தது.இன்று காலை முதல் ஒலிபெருக்கியில் விளம்பரம் போட்டு கொண்டு ஊர்முழுவதும் வளம் வருகிறது சட்டை சின்னம். நமதூரில் வெட்டி பேச்சு இடமான செக்கடி மோட்டில் தேர்தல் வாக்குவாதம் அரங்கேறுகிறது. இதனால் அதிரையே கலை கட்டுகிறது.தேர்தலுக்கு இன்னும் ஒரு வரேமே உள்ள நிலையில் அதிரை நகறேமே அதிர்கிறது. அதிரையிலிருந்து முஸ்லிம்மலர் ஹசன்.
0 comments:
Post a Comment